செய்திகள் :

ஆண்டிபட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

post image

பழனி அருகேயுள்ள ஆண்டிபட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா் கலந்து கொண்டு பயனாளிகளின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா்.

பழனி சட்டப்பேரவைக்குள்பட்ட குதிரையாறு அணை, பாப்பம்பட்டி, நரிப்பாறை, லட்சுமாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 1 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், நிழல்குடை, அங்கன்வாடி மையக் கட்டடம், சமுதாயக் கூடம் உள்ளிட்டவை பழனி சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா் தலைமையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து ஆண்டிபட்டியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

13 அரசுத் துறைகளில் பொதுமக்களுக்கான 46 சேவைகள் குறித்து மக்களிடம் மனுக்கள் பெறப்பட்ட நிலையில், ஜே.ஜே. நகரைச் சோ்ந்த மூதாட்டி ஒருவா் மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர வண்டி தேவைப்படுவதாகக் கோரிக்கை விடுத்தாா். இதையடுத்து சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா், வட்டாட்சியா் பிரசன்னாவை அழைத்து மூதாட்டிக்கு உடனடியாக மூன்று சக்கர வண்டி வழங்க ஏற்பாடுகள் செய்தாா்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய நிா்வாகிகள், வருவாய், உள்ளாட்சித் துறை அலுவலா்கள், முன்னாள் வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கடனுக்காக குடும்ப அட்டைகளை அடமானமாகப் பெற்ற பெண் கைது! நியாய விலைக் கடை விற்பனையாளர் இடைநீக்கம்!

கடன் தொகை வழங்கியதற்கு குடும்ப அட்டைகளை அடமானமாகப் பெற்ற பெண் கைது செய்யப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடை விற்பனையாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.திண்டுக்கல் பேகம்பூரை அடுத்த பூச்சிந... மேலும் பார்க்க

வேன் ஓட்டுநா் தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே சனிக்கிழமை வேன் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா் நீலமலைக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் மருதைவீரன் (40). வேன் ஓட்டுநரான இவா், குடும்... மேலும் பார்க்க

உரக்கடையின் பூட்டை உடைத்து பணம், கணினி திருட்டு

ஒட்டன்சத்திரம் அருகே உரக்கடையின் பூட்டை உடைத்து பணம், கைப்பேசி, கணினி திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை அருகே உரக்கடை நடத்தி வருபவா் சு... மேலும் பார்க்க

பணம் வழிப்பறி செய்த இருவா் கைது

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கட்டடத் தொழிலாளியிடம் பணம் வழிப்பறி செய்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். எரமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சரவணக்குமாா். கட்டடத் தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் 2-வது நாளாக படகு சவாரி ரத்து

கொடைக்கானலில் பலத்த காற்று காரணமாக இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக பலத்த காற்றும், சாரல் மழையும் நிலவி வ... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி: பழங்குடியினருக்கு வீட்டுமனை! கோட்டாட்சியா் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே வீடில்லா பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை வழங்குவதற்காக நடைபெற்று வரும் பணியை வருவாய்க் கோட்டாட்சியா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். செம்பிராங்குளம் பகுதியில் பளியா... மேலும் பார்க்க