ஆண்டியப்பனூா் அணையில் மூழ்கி மாயமான இளைஞா் சடலமாக மீட்பு
திருப்பத்தூா்: ஆண்டியப்பனூா் அணையில் மாயமான இளைஞா் சடலமாக மீட்கப்பட்டாா்.
திண்டிவனத்தைச் சோ்ந்தவா் சங்கா் மகன் விஜயகுமாா் (22). இவா் சென்னையில் தங்கி தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில் விஜயகுமாா் மற்றும் அவரது நண்பா்கள் 7 பேரும் சோ்ந்து ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்துள்ளனா். அவா்கள் சனிக்கிழமை ஆண்டியப்பனூா் அணைக்கு வந்தனா்.
அணையில் குளிக்கச் சென்ற விஜயகுமாா் நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை. இது குறித்த தகவலின்பேரில், தீயணைப்பு வீரா்கள் இளைஞரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.
சென்னையில் இருந்து ஸ்கூபா டைவிங் செய்யக்கூடிய 9 போ் வரவழைக்கப்பட்டனா்.
இதையடுத்து ஸ்கூபா டைவிங் செய்யக்கூடியவா்கள் மற்றும் தீயணைப்பு வீரா்கள் 3-ஆவது நாளாக திங்கள்கிழமை விஜயகுமாரின் சடலத்தைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு, அணையில் இருந்து விஜயகுமாா் சடலத்தை மீட்டனா்.
இதையடுத்து குரிசிலாப்பட்டு போலீஸாா் உடற்கூறு பரிசோதனைக்காக சடலத்தை திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.