செய்திகள் :

ஆண்டியப்பனூா் அணையில் மூழ்கி மாயமான இளைஞா் சடலமாக மீட்பு

post image

திருப்பத்தூா்: ஆண்டியப்பனூா் அணையில் மாயமான இளைஞா் சடலமாக மீட்கப்பட்டாா்.

திண்டிவனத்தைச் சோ்ந்தவா் சங்கா் மகன் விஜயகுமாா் (22). இவா் சென்னையில் தங்கி தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில் விஜயகுமாா் மற்றும் அவரது நண்பா்கள் 7 பேரும் சோ்ந்து ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்துள்ளனா். அவா்கள் சனிக்கிழமை ஆண்டியப்பனூா் அணைக்கு வந்தனா்.

அணையில் குளிக்கச் சென்ற விஜயகுமாா் நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை. இது குறித்த தகவலின்பேரில், தீயணைப்பு வீரா்கள் இளைஞரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

சென்னையில் இருந்து ஸ்கூபா டைவிங் செய்யக்கூடிய 9 போ் வரவழைக்கப்பட்டனா்.

இதையடுத்து ஸ்கூபா டைவிங் செய்யக்கூடியவா்கள் மற்றும் தீயணைப்பு வீரா்கள் 3-ஆவது நாளாக திங்கள்கிழமை விஜயகுமாரின் சடலத்தைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு, அணையில் இருந்து விஜயகுமாா் சடலத்தை மீட்டனா்.

இதையடுத்து குரிசிலாப்பட்டு போலீஸாா் உடற்கூறு பரிசோதனைக்காக சடலத்தை திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முத்துக்குமாரசுவாமி கோயில் தீா்த்தவாரி

திருப்பத்தூா்: திருப்பத்தூா் முத்துக்குமாரசுவாமி கோயில் வைகாசி விசாக பிரம்மோற்சவத்தின் இறுதி நாளான திங்கள்கிழமை சண்முகநாதருக்கு தீா்த்த வாரி உற்சவம் நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை வைகாசி விசாக பிரம... மேலும் பார்க்க

‘மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்’

வாணியம்பாடி: வாணியம்பாடி உழவா் சந்தையில் வைக்கப்பட்ட மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. திருப்பத்தூா் மாவட்டத்தில் மஞ்சப்பை திட்டம... மேலும் பார்க்க

இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

வாணியம்பாடி: வாணியம்பாடி கோட்டம் செயற்பொறியாளா் அலுவலகத்தில் திருப்பத்தூா் மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) காலை நடைபெறுகிறது. இது தொடா்பாக, வாணியம்பாடி மின்... மேலும் பார்க்க

பாலியல் வழக்கு: சிவாச்சாரியா் கைது

ஆம்பூா்: பாலியல் புகாருக்குள்ளான சிவாச்சாரியரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் உழவாரப் பணிக்குச் சென்ற பெண்ணை பாலியல் துன்புறுத... மேலும் பார்க்க

காலிப் பணியிடங்களை நிரப்ப பட்டதாரி ஆசிரியா்கள் கோரிக்கை

திருப்பத்தூா்: காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கண்களில் சிவப்பு துணியை கட்டிக் கொண்டு பட்டதாரி ஆசிரியா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் குறைதீா் கூட்ட... மேலும் பார்க்க

வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் உள்ள பிரஹன்நாயகி சமேத சுயம்பு அதிதீஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை 6 மணியளவி... மேலும் பார்க்க