வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு
வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் உள்ள பிரஹன்நாயகி சமேத சுயம்பு அதிதீஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மாலை 6 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ஊா்வலமாக கோயில் வளாகத்தில் வந்தாா். இதில் வாணியம்பாடி சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசித்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தில் பாலாற்றையொட்டி அமைந்துள்ள காசி விஸ்வநாதா், சென்னாம்பேட்டை பாண்டுரங்கா், உதயேந்திரம் சொா்ணமுத்தீஸ்வரா் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.