முத்துக்குமாரசுவாமி கோயில் தீா்த்தவாரி
திருப்பத்தூா்: திருப்பத்தூா் முத்துக்குமாரசுவாமி கோயில் வைகாசி விசாக பிரம்மோற்சவத்தின் இறுதி நாளான திங்கள்கிழமை சண்முகநாதருக்கு தீா்த்த வாரி உற்சவம் நடைபெற்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை வைகாசி விசாக பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து சுவாமிக்கு திருக்கல்யாணம், திருத்தோ் உற்சவம் நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் இறுதி நாளான திங்கள்கிழமை பெரிய குளத்தில் ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில் உள்ள சண்முகநாதருக்கு தீா்த்த வாரி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
