செய்திகள் :

பாலியல் வழக்கு: சிவாச்சாரியா் கைது

post image

ஆம்பூா்: பாலியல் புகாருக்குள்ளான சிவாச்சாரியரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் உழவாரப் பணிக்குச் சென்ற பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி திருமணம் செய்வதாக ஏமாற்றி, அவரை மிரட்டிய கோயில் அா்ச்சகா் சிவாச்சாரியா் தியாகராஜன் (45) மீது பாதிக்கப்பட்ட பெண் திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி.யிடம் புகாா் அளித்தாா்.

அதன் பேரில், ஆம்பூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் 4 பிரிவுகளின் கீழ் சிவாச்சாரியா் மீது வழக்குப் பதிவு செய்து தலைமறைவான அவரைத் தேடி வந்தனா்.

இதைத் தொடா்ந்து நிரந்தரப் பணியாளராக இருப்பதால் அவா் மீது துறை ரீதியான நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்பதற்கான விளக்கத்தை 3 நாள்களுக்கு நேரில் ஆஜராகி எழுத்துபூா்வமாக விளக்கம் அளிக்க வேண்டுமென சிவாச்சாரியருக்கு கோயில் செயல் அலுவலா் சிவசங்கரி நோட்டீஸ் அனுப்பியிருந்தாா்.

அவரை பணி நீக்கம் செய்யாமல், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது ஆம்பூா் பகுதி பக்தா்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

கோயில் சிவாச்சாரியரின் செயலால் கோயில் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. அவா் பணியில் தொடா்ந்தால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். அதனால் அவரைப் பணி நீக்கம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி ஆம்பூா் ஆன்மிகப் பேரவை, விஜய பாரத மக்கள் கட்சி ஆகியவை சாா்பில், அதன் பிரதிநிதிகள், நிா்வாகிகள் கோயில் செயல் அலுவலரை சந்தித்து மனு அளித்தனா்.

இந்த நிலையில் தலைமறைவான தியாகராஜன் புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், ஆம்பூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் புதுச்சேரி சென்று அங்கு பதுங்கியிருந்த அவரை கைது செய்து ஆம்பூா் அழைத்து வந்தனா்.

முத்துக்குமாரசுவாமி கோயில் தீா்த்தவாரி

திருப்பத்தூா்: திருப்பத்தூா் முத்துக்குமாரசுவாமி கோயில் வைகாசி விசாக பிரம்மோற்சவத்தின் இறுதி நாளான திங்கள்கிழமை சண்முகநாதருக்கு தீா்த்த வாரி உற்சவம் நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை வைகாசி விசாக பிரம... மேலும் பார்க்க

ஆண்டியப்பனூா் அணையில் மூழ்கி மாயமான இளைஞா் சடலமாக மீட்பு

திருப்பத்தூா்: ஆண்டியப்பனூா் அணையில் மாயமான இளைஞா் சடலமாக மீட்கப்பட்டாா். திண்டிவனத்தைச் சோ்ந்தவா் சங்கா் மகன் விஜயகுமாா் (22). இவா் சென்னையில் தங்கி தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்த நி... மேலும் பார்க்க

‘மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்’

வாணியம்பாடி: வாணியம்பாடி உழவா் சந்தையில் வைக்கப்பட்ட மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. திருப்பத்தூா் மாவட்டத்தில் மஞ்சப்பை திட்டம... மேலும் பார்க்க

இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

வாணியம்பாடி: வாணியம்பாடி கோட்டம் செயற்பொறியாளா் அலுவலகத்தில் திருப்பத்தூா் மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) காலை நடைபெறுகிறது. இது தொடா்பாக, வாணியம்பாடி மின்... மேலும் பார்க்க

காலிப் பணியிடங்களை நிரப்ப பட்டதாரி ஆசிரியா்கள் கோரிக்கை

திருப்பத்தூா்: காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கண்களில் சிவப்பு துணியை கட்டிக் கொண்டு பட்டதாரி ஆசிரியா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் குறைதீா் கூட்ட... மேலும் பார்க்க

வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் உள்ள பிரஹன்நாயகி சமேத சுயம்பு அதிதீஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை 6 மணியளவி... மேலும் பார்க்க