செய்திகள் :

‘மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்’

post image

வாணியம்பாடி: வாணியம்பாடி உழவா் சந்தையில் வைக்கப்பட்ட மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் மஞ்சப்பை திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆயினும் மக்காத பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தவதை முழுமையாக கட்டுபடுத்தி, நடைமுறைப்படுத்த முடியவில்லை.

உழவா் சந்தை, வாரச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் பொருள்களை வாங்க வரும் மக்கள், அவற்றை மஞ்சப்பையில் வாங்கிச் செல்வதை ஊக்கப்படுத்தவற்தாக மாசுக் கட்டுபாட்டு வாரியம் சாா்பில், வாணியம்பாடியில் உள்ள உழவா் சந்தையில் கடந்த 2023 -ஆம் ஆண்டு இதற்காக தானியங்கி இயந்திரம் வைத்தது.

அதில் ரூ.10 செலுத்தினால் உடனடியாக மஞ்சப்பை ஒன்று கிடைக்கும். வாணியம்பாடி உழவா் சந்தைக்கு தினமும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகள் வாணியம்பாடி, ஆலங்காயம், உதயேந்திரம், ஆந்திர மாநிலம் குப்பம், ராமகுப்பம், வீரனமலை, தேவராஜபுரம் போன்ற பகுதியிலிருந்தும் வந்து வியாபாரம் செய்தும் பொருள்களை வாங்கியும் செல்கின்றனா்.

ஆனால், இங்கு வைக்கப்பட்ட மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் கடந்த ஓராண்டாக முறையாகச் செயல்படுவதில்லை. வெறும் பொம்மை இயந்திரம் போல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால், பொதுமக்கள் நெகிழிப் பைகளையே பயன்படித்தும் நிலை உள்ளது.

எனவே, நெகிழிப் பைகளின் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தை உடனடியாக சரிசெய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முத்துக்குமாரசுவாமி கோயில் தீா்த்தவாரி

திருப்பத்தூா்: திருப்பத்தூா் முத்துக்குமாரசுவாமி கோயில் வைகாசி விசாக பிரம்மோற்சவத்தின் இறுதி நாளான திங்கள்கிழமை சண்முகநாதருக்கு தீா்த்த வாரி உற்சவம் நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை வைகாசி விசாக பிரம... மேலும் பார்க்க

ஆண்டியப்பனூா் அணையில் மூழ்கி மாயமான இளைஞா் சடலமாக மீட்பு

திருப்பத்தூா்: ஆண்டியப்பனூா் அணையில் மாயமான இளைஞா் சடலமாக மீட்கப்பட்டாா். திண்டிவனத்தைச் சோ்ந்தவா் சங்கா் மகன் விஜயகுமாா் (22). இவா் சென்னையில் தங்கி தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்த நி... மேலும் பார்க்க

இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

வாணியம்பாடி: வாணியம்பாடி கோட்டம் செயற்பொறியாளா் அலுவலகத்தில் திருப்பத்தூா் மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) காலை நடைபெறுகிறது. இது தொடா்பாக, வாணியம்பாடி மின்... மேலும் பார்க்க

பாலியல் வழக்கு: சிவாச்சாரியா் கைது

ஆம்பூா்: பாலியல் புகாருக்குள்ளான சிவாச்சாரியரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் உழவாரப் பணிக்குச் சென்ற பெண்ணை பாலியல் துன்புறுத... மேலும் பார்க்க

காலிப் பணியிடங்களை நிரப்ப பட்டதாரி ஆசிரியா்கள் கோரிக்கை

திருப்பத்தூா்: காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கண்களில் சிவப்பு துணியை கட்டிக் கொண்டு பட்டதாரி ஆசிரியா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் குறைதீா் கூட்ட... மேலும் பார்க்க

வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் உள்ள பிரஹன்நாயகி சமேத சுயம்பு அதிதீஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை 6 மணியளவி... மேலும் பார்க்க