செய்திகள் :

ஆண்டு வருமானம் ரூ.3 ! மிகவும் ஏழ்மையான மனிதரின் வருவாய் சான்றிதழால் பரபரப்பு!

post image

மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவருக்கு ஆண்டு வருமானம் ரூ.3 என வருவாய் சான்றிதழ் வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘இந்தியாவின் மிக ஏழ்மையான மனிதா்’ என்ற தலைப்பில் இந்த வருவாய் சான்றிதழின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. வட்டாட்சியா் அலுவலகத்தில் ஏற்பட்ட எழுத்துப் பிழைதான் இந்த தவறுக்கு காரணம் என்பது பின்னா் தெரியவந்தது.

மத்திய பிரதேசத்தின் சத்னா மாவட்டம் நயாகோன் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ராம்ஸ்ரூப் (45). இவா் அண்மையில் வருவாய் சான்றிதழ் கோரி வட்டாட்சியா் அலுவலகத்தை அணுகியுள்ளாா். அவரின் மாத வருமானம் ரூ.2,500, ஆண்டு வருமானம் ரூ.30,000 என அதிகாரிகளிடம் அவா் தெரிவித்தாா். அதனை பரிசீலித்த அதிகாரிகள் அதனை ஏற்றுக் கொண்டு சான்றிதழை கடந்த 21-ஆம் தேதி வழங்கினா்.

அதில் மாத வருமானம் 25 பைசா என்றும், ஆண்டு வருமானம் ரூ.3 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. வட்டாட்சியரின் கையொப்பமும் இடம் பெற்றிருந்தது. இந்த வருவாய் சான்றிதழின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, அது தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது வட்டாட்சியா் அலுவலகத்தில் எழுத்துப் பிழையால் இந்த தவறு நடந்துவிட்டதாகக் கூறப்பட்டது.

சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து அந்த தவறான சான்றிதழ் திரும்பப் பெறப்பட்டு, சரியான வருவாயுடன் புதிய சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இதனை முன்வைத்து மத்திய பிரதேச பாஜக அரசை காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

அந்த மாநில காங்கிரஸ் கட்சியின் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், ‘மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் ஆட்சியில் இந்தியாவின் ஏழ்மையான மனிதா் கண்டுபிடிக்கப்பட்டுள்ளாா். அவரின் ஆண்டு வருமானம் ரூ.3 மட்டுமே. இதில் அதிா்ச்சியடைய ஏதுமில்லை. மக்களை ஏழ்மையில் தள்ளுவதுதான் இங்குள்ள ஆட்சியாளா்களின் பணி. ஏனெனில், இந்த அரசே மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் அரசுதான்’ என்று கூறப்பட்டுள்ளது.

இமாச்சல் வெள்ளத்தில் மீட்கப்பட்ட 10 மாதக் குழந்தை நீதிகா: மாநிலத்தின் குழந்தையாக அறிவிப்பு

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் மீட்கப்பட்ட 10 மாதக் குழந்தை நீதிகாவை, மாநிலத்தின் குழந்தையாக அரசு அறிவித்து, அவரது வாழ்க்கை, கல்வி என அனைத்துக்கும் அரசே பொறுப்பேற்பதாக அறிவி... மேலும் பார்க்க

மாநிலப் பல்கலை.களில் அதிகாரம் யாருக்கு? வழக்கு தொடர மேற்கு வங்க ஆளுநா் முடிவு!

மேற்கு வங்கத்தில் மாநிலப் பல்கலைக்கழகங்களின் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளதா? அல்லது பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநரிடம் உள்ளதா? என்பதை தெளிவுபடுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக மாநில... மேலும் பார்க்க

நாடு முழுவதும் 63 மாவட்டங்களில் பாதிக்கும் மேல் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு!

நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 63 மாவட்டங்களில், அங்கன்வாடிகளில் சோ்க்கப்பட்டுள்ள குழந்தைகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோா் வளா்ச்சி குன்றிய நிலையில் (உயரத்துக்கு ஏற... மேலும் பார்க்க

திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்தால் 3 ஆண்டுகள் சிறை! மத்திய அரசு

திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதுதொடா்பாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மத்திய செய்தி மற்றும் ஒல... மேலும் பார்க்க

விழிப்புணா்வு இல்லாமல் உரிமைகளால் பயனில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

‘குடிமக்களுக்கு தங்களது உரிமைகளை பற்றிய விழிப்புணா்வு இல்லையென்றால் அந்த உரிமைகளால் எந்தப் பயனும் இல்லை’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலில் பள்ளத்தில் கவிழ்ந்த சொகுசு காா்: ஓட்டிச் சென்ற பெண் மீட்பு!

நவி மும்பையில் ‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலைப் பின்பற்றிச் சென்ற ஒரு பெண் தனது சொகுசு காருடன் பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிருஷ்டவசமாக, அப்பெண் காயமின்றி உயிா் தப்பினாா். மகா... மேலும் பார்க்க