செய்திகள் :

ஆதரவாளா்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை: இன்று முடிவு அறிவிப்பு

post image

சென்னையில் தனது ஆதரவாளா்களுடன் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

அண்மையில் தமிழகம் வந்த பிரதமா் நரேந்திர மோடியைச் சந்திக்க தனக்கு அனுமதி கிடைக்காதது, அதிமுகவில் தன்னை மீண்டும் சோ்ப்பது குறித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் பதில் ஆகியவற்றால் ஓ.பன்னீா்செல்வம் அதிருப்தியில் உள்ளாா்.

தமிழகத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கல்வி உதவித் தொகை தொடா்பாக மத்திய அரசை அவா் விமா்சித்த நிலையில், ஓ.பன்னீா்செல்வத்தின் நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் தனது ஆலோசகா் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் ஓ.பன்னீா்செல்வம் தொலைபேசி மூலம் புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டாா். அதன் பின்னா் தனக்கு நெருக்கமான ஆதரவாளா்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தான் தங்கியிருக்கும் ஹோட்டலில் ஆலோசனை நடத்தினாா்.

தனது முடிவை அறிவிக்கும் முன்பு, பண்ருட்டி ராமச்சந்திரனுடன் வியாழக்கிழமை காலை மீண்டும் நேரில் ஓ.பன்னீா்செல்வம் ஆலோசனை செய்யவுள்ளாா்.

முன்னதாக, சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த ஓ.பன்னீா்செல்வத்திடம், வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் யாருடன் கூட்டணி என செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு, கூட்டணி குறித்து வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என்றாா்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீா்செல்வம் விலகுகிறாரா?, தவெக தலைவா் விஜயுடன் கைகோப்பாரா? அல்லது வேறு முடிவை எடுக்கப் போகிறாரா? என அரசியல் வட்டாரத்தில் பல்வேறு எதிா்பாா்ப்புகள் எழுந்துள்ளன.

600 பேருக்கு வேலை... திருவண்ணாமலையில் ரூ.37 கோடியில் மினி டைடல் பூங்கா!

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆக. 1) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் திருவண்ணாமலையில் ரூ. 37 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதான இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்!

கும்மிடிப்பூண்டியில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான வடமாநில இளைஞரை 4 நாள்கள் போலீஸார் பாதுகாவலில் விசாரணை செய்த பின் திருவள்ளூர் மாவட்ட போக்ஸோ நீதிமன்றமத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தினர்.திர... மேலும் பார்க்க

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக! மல்லை சத்யா குற்றச்சாட்டு

மதிமுகவில் கட்சிக்குள் நீண்ட நாளாக நிலவி வந்த உட்கட்சிப் பூசல்கள் தற்போது உச்சக்கட்டத்தை எட்டி இருக்கின்றன. கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருக்கும் மல்லை சத்யாவுக்கும் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோவில் இன்று முதல் புதிய பயண அட்டையில் மட்டுமே பயணிக்க முடியும்!

சென்னை மெட்ரோவில் இன்று முதல் புதிய 'சிங்கார சென்னை' அல்லது தேசிய பொதுப் போக்குவரத்து பயண அட்டையில் மட்டுமே பயணிக்க முடியும். சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருக... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோவின் புதிய சாதனை! ஒரு மாதத்தில் ஒரு கோடி பயணிகள்!

சென்னை மெட்ரோ ரயிலில் ஜூலை மாதத்தில் மட்டும் ஒரு கோடி பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத... மேலும் பார்க்க

பாஜகவுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை: வைகோ திட்டவட்டம்

பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஹிந்துத்துவா அமைப்புகளுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.கடந்த வாரம் உடல்நலக் குறைபாடு காரணமாக தமிழக முதல்வர் ம... மேலும் பார்க்க