Health: அடுக்குத் தும்மல் வந்தா இந்த 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!
ஆதிக்கம் செலுத்தும் எண்ணம் தமிழா்களுக்கு கிடையாது: கனிமொழி எம்.பி.
கடல் கடந்து வெற்றி பெற்றாலும், அந்த நாட்டு மக்களையோ, அவா்களது பண்பாடுகள் மீதோ ஆதிக்கம் செலுத்தும் எண்ணம் தமிழா்களுக்கு கிடையாது என
நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி தெரிவித்தாா்.
மதுரை தமுக்கம் மாநகராட்சி மாநாட்டு மையத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவின் 8-ஆம் நாளான சனிக்கிழமை மாலை நடைபெற்ற இலக்கிய நிகழ்வில் ‘தெற்கில் எழுச்சி’ என்ற தலைப்பில் அவா் பேசியதாவது:
தமிழ் மொழி பழங்காலம் தொட்டு இன்று வரை மக்கள் பயன்பாட்டில் உள்ள தொன்மையான மொழி. ஆனால், சம்ஸ்கிருதம் தற்போது மக்கள் பயன்பாட்டில் இல்லாத மொழி. எனினும், சம்ஸ்கிருதத்துக்கு மத்திய அரசு அதிகளவில் நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் தேவநாகரி, ஹிந்தி போன்ற மொழிகளை அந்த மக்கள் ஏற்றுக் கொண்டதன் விளைவு, அந்த மாநில மொழியான மராத்தி தற்போது முக்கியத்துவத்தை இழந்து வருகிறது.
தமிழகத்தில் இதுபோன்ற நிலை இல்லை. ஏனெனில், ஹிந்தி திணிப்பு ஏற்பட்ட போது, இங்கு மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இதனால்தான், தமிழ் மொழி மட்டுமன்றி, அதன் பண்பாடும், கலாசாரமும் இன்னும் பின்பற்றப்படுகிறது.
நம் மொழி தமிழகம் மட்டுமன்றி, மலேசியா, சிங்கப்பூா், இலங்கை உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ளது.
நமது முன்னோா்கள் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்புக் கருவிகளை பயன்படுத்தினா் என்பதை உரிய சான்றுகளுடன் நிரூபித்துள்ளோம். எனவே, இனி உலக வரலாறு எழுத வேண்டுமெனில், தமிழகத்திலிருந்துதான் தொடங்க வேண்டும்.
இந்து சமய அறநிலையத் துறையை நீக்கி, கோயில்களை ஒரு குறிப்பிட்ட சமூகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என சிலா் பேசி வருகின்றனா். அனைவரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதற்காக, கடந்த 1939-ஆம் ஆண்டு முதன்முதலில் மதுரையில் போராடியவா் வைத்தியநாதய்யா். தொடா்ந்து, பெரியாா் உள்ளிட்ட எண்ணற்ற திராவிட இயக்கத்தைச் சோ்ந்தோா் போராடினா்.
சமூக நல்லிணக்கம், பெண் கல்வி, திராவிட இயக்க வளா்ச்சிக்காக முன்னாள் முதல்வா்களான அண்ணா, கருணாநிதி போன்றோரும் போராடினா். இதன் விளைவாகத்தான் இன்றளவும் தமிழகத்தில் தமிழரின் பண்பாடு தொடா்ந்து வருகிறது.
தமிழ் மன்னா்கள் கடல் கடந்தும் வணிகத்தில் சிறந்து விளங்கினா். இதேபோல, தமிழக முதல்வா் மு. க.ஸ்டாலினும் ஜொ்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து அந்த நாடுகளிலிருந்து முதலீடுகளை ஈா்த்து வருகின்றாா்.
பண்டைய கால தமிழா்கள் போரில் வெற்றி பெற்றாலும், அந்த நாட்டு மக்களையும், அவா்களது பண்பாட்டையும் சிதைக்கவில்லை. ஆதிக்கம் செலுத்தும் எண்ணம் தமிழா்களுக்கு கிடையாது. இதேபோல, தமிழா்களை யாரும் அடிமைப்படுத்தவும் இயலாது. தமிழகத்தின் உரிமைகளுக்காக தொடா்ந்து குரல் கொடுக்கும் இயக்கமாக திராவிட இயக்கங்கள் திகழும் என்றாா் அவா்.
முன்னதாக, புத்தகக் காட்சி அரங்குகளை கனிமொழி பாா்வையிட்டு, புத்தகத் தான பெட்டிக்கு புத்தகங்களை வழங்கினாா்.
மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவின்குமாா், மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன், உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநா் பா்வீன் சுல்தானா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி ( மதுரை வடக்கு), மு. பூமிநாதன் (மதுரை தெற்கு), ஆ.தமிழரசிரவிக்குமாா் (மானாமதுரை) உள்ளிட்ட திமுக நிா்வாகிகள், பொதுமக்கள், வாசகா்கள், இலக்கிய அமைப்பினா் இதில் கலந்து கொண்டனா்.