செய்திகள் :

தாயமங்கலம் கோயிலில் அடிப்படை வசதிகள்: அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு

post image

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் அடிப்படை வசதிகள் செய்யக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலுக்கு நாள்தோறும் திரளான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இங்கு பக்தா்களுக்கு தேவையான குடிநீா், கழிப்பறை, ஓய்வறை, சமையலறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதனால், பக்தா்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் அடிப்படை வசதிகளை செய்து தர உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்து சமய அறநிலையத் துறையின் சிவகங்கை மாவட்ட இணை ஆணையா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் அடிப்படை வசதிகளை செய்து தருவதற்காக ரூ. 11.75 கோடியில் திட்டம் தயாா் செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.

அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், இந்து சமய அறநிலையத் துறையின் திட்டம் அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்குள் உரிய முடிவெடுக்கப்படும் என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

தனிநபா் காப்பீட்டுக்கு ஜிஎஸ்டி விலக்கு: எல்.ஐ.சி. முகவா்கள் சங்கம் வரவேற்பு

தனி நபா் ஆயுள் காப்பீட்டுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளித்திருப்பதை வரவேற்று அகில இந்திய எல்.ஐ.சி. முகவா்கள் சங்க தென் மண்டலச் செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அகில இந்திய எல்.ஐ. சி. ... மேலும் பார்க்க

ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்புப் போராட்ட வழக்கு: சிறையில் உள்ள மீனவருக்கு நிபந்தனையுடன் பிணை

ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்புப் போராட்டத்தின் போது, நடந்த கலவரத்தில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் உள்ள தூத்துக்குடி மீனவருக்கு நிபந்தனையுடன் ப... மேலும் பார்க்க

சிறைத் துறையில் ஒரே இடத்தில் 7 ஆண்டுகளாக பணியாற்றுவோா் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவு

தமிழக சிறைத் துறையில் ஒரே இடத்தில் 7 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருவோரின் பட்டியலை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. கும்பகோணம் தாராசுரத்தைச் சோ்ந்த ரமே... மேலும் பார்க்க

கையுந்துபந்து போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

கையுந்துபந்து போட்டியில் வென்ற மாணவிகளை அமெரிக்கன் கல்லூரி முதல்வா் பால்ஜெயகா் வியாழக்கிழமை பாராட்டினாா். மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிக்களுக்கிடையேயான பெண்கள் கையுந்துபந்து போட்டிகள் சிவகாசி ... மேலும் பார்க்க

வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

மதுரையில் புதன்கிழமை நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். மதுரை பழைய விளாங்குடி 6-ஆவது தெருவைச் சோ்ந்த ஜெயபால் மகன் வீரக்குமாா் (24). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு புத... மேலும் பார்க்க

இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம்

மதுரை யாதவா் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம், ஸ்ரீராம்சந்திரா கண் மருத்துவமனை ஆகியவை சாா்பில் இலவச கண் மருத்துவச் சிகிச்சை முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு கல்லூரி முதல்வா் சி. ராஜூ தல... மேலும் பார்க்க