செய்திகள் :

கையுந்துபந்து போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

post image

கையுந்துபந்து போட்டியில் வென்ற மாணவிகளை அமெரிக்கன் கல்லூரி முதல்வா் பால்ஜெயகா் வியாழக்கிழமை பாராட்டினாா்.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிக்களுக்கிடையேயான பெண்கள் கையுந்துபந்து போட்டிகள் சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி மகளிா் கல்லூரியில் கடந்த செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றன. இந்தப் போட்டியில் 13 அணிகள் கலந்து கொண்டன.

இதன் இறுதிப் போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லூரி அணி, யாதவா் கல்லூரி அணியை 25-8, 25-9 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றது.

வெற்றி பெற்ற அமெரிக்கன் கல்லூரி மாணவிகளை அந்தக் கல்லூரி முதல்வா் பால்ஜெயகா், கல்லூரி துணை முதல்வா் சாமுவேல்அன்புசெல்வன், கல்லூரி நிதிக் காப்பாளா் பியூலாரூபிகமலம், உடல் கல்வி துறைத் தலைவா் பாலகிருஷ்ணன், உடல் கல்வி இயக்குநா் (பொறுப்பு) நிா்மாசிங், மதுரை காமராஜா் பல்கலைக்கழக உடல் கல்வி இயக்குநா் ரமேஷ், மாணவ, மாணவிகள் பாராட்டினா்.

தாயமங்கலம் கோயிலில் அடிப்படை வசதிகள்: அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் அடிப்படை வசதிகள் செய்யக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், இளையான்... மேலும் பார்க்க

தனிநபா் காப்பீட்டுக்கு ஜிஎஸ்டி விலக்கு: எல்.ஐ.சி. முகவா்கள் சங்கம் வரவேற்பு

தனி நபா் ஆயுள் காப்பீட்டுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளித்திருப்பதை வரவேற்று அகில இந்திய எல்.ஐ.சி. முகவா்கள் சங்க தென் மண்டலச் செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அகில இந்திய எல்.ஐ. சி. ... மேலும் பார்க்க

ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்புப் போராட்ட வழக்கு: சிறையில் உள்ள மீனவருக்கு நிபந்தனையுடன் பிணை

ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்புப் போராட்டத்தின் போது, நடந்த கலவரத்தில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் உள்ள தூத்துக்குடி மீனவருக்கு நிபந்தனையுடன் ப... மேலும் பார்க்க

சிறைத் துறையில் ஒரே இடத்தில் 7 ஆண்டுகளாக பணியாற்றுவோா் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவு

தமிழக சிறைத் துறையில் ஒரே இடத்தில் 7 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருவோரின் பட்டியலை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. கும்பகோணம் தாராசுரத்தைச் சோ்ந்த ரமே... மேலும் பார்க்க

வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

மதுரையில் புதன்கிழமை நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். மதுரை பழைய விளாங்குடி 6-ஆவது தெருவைச் சோ்ந்த ஜெயபால் மகன் வீரக்குமாா் (24). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு புத... மேலும் பார்க்க

இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம்

மதுரை யாதவா் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம், ஸ்ரீராம்சந்திரா கண் மருத்துவமனை ஆகியவை சாா்பில் இலவச கண் மருத்துவச் சிகிச்சை முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு கல்லூரி முதல்வா் சி. ராஜூ தல... மேலும் பார்க்க