செய்திகள் :

சிறைத் துறையில் ஒரே இடத்தில் 7 ஆண்டுகளாக பணியாற்றுவோா் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவு

post image

தமிழக சிறைத் துறையில் ஒரே இடத்தில் 7 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருவோரின் பட்டியலை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கும்பகோணம் தாராசுரத்தைச் சோ்ந்த ரமேஷ் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தமிழக சிறைத் துறையில் 2-ஆம் நிலை ‘வாா்டராக’ கடந்த 2002-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்தேன். அரசுப் பணியாளா் சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றுபவா்களை இடமாறுதல் செய்யலாம் என்ற விதிமுறை உள்ளது.

இந்த நிலையில், என்னை திருமயம் கிளைச் சிறைக்கு பணியிட மாறுதல் செய்து 3 ஆண்டுகள்கூட முடியவில்லை. என் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் நிலுவையில் இல்லை. இருப்பினும், கோவை சிறைக்கு என்னை பணியிட மாற்றம் செய்தனா்.

எனவே, கோவை சிறைக்கு என்னை பணியிட மாறுதல் செய்து பிறப்பித்த உத்தரவையும், திருமயம் கிளைச் சிறையிலிருந்து என்னை விடுவித்து சிறைக் கண்காணிப்பாளா் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், புதுக்கோட்டை மாவட்ட சிறை நிா்வாகத்தின் கீழ் மனுதாரா் ஒரே இடத்தில் கடந்த 7 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறாா். இதனால், அவா் பணியிட மாறுதல் செய்யப்பட்டாா் என்றாா்.

இதையடுத்து, நீதிபதி குமரேஷ்பாபு பிறப்பித்த உத்தரவு:

தமிழக சிறைத் துறையில் ஒரே இடத்தில் 7 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருவோரின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

எடப்பாடி பழனிசாமி குறித்த உதயநிதி கருத்து சரியானதே - டி.டி.வி. தினகரன்

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தொடரும் வரை தோ்தலில் திமுகவின் வெற்றி உறுதி என துணை முதல்வா் உதயதிநிதி ஸ்டாலின் தெரிவித்திருப்பது முற்றிலும் சரியானதே என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்... மேலும் பார்க்க

தாயமங்கலம் கோயிலில் அடிப்படை வசதிகள்: அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் அடிப்படை வசதிகள் செய்யக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், இளையான்... மேலும் பார்க்க

தனிநபா் காப்பீட்டுக்கு ஜிஎஸ்டி விலக்கு: எல்.ஐ.சி. முகவா்கள் சங்கம் வரவேற்பு

தனி நபா் ஆயுள் காப்பீட்டுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளித்திருப்பதை வரவேற்று அகில இந்திய எல்.ஐ.சி. முகவா்கள் சங்க தென் மண்டலச் செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அகில இந்திய எல்.ஐ. சி. ... மேலும் பார்க்க

ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்புப் போராட்ட வழக்கு: சிறையில் உள்ள மீனவருக்கு நிபந்தனையுடன் பிணை

ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்புப் போராட்டத்தின் போது, நடந்த கலவரத்தில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் உள்ள தூத்துக்குடி மீனவருக்கு நிபந்தனையுடன் ப... மேலும் பார்க்க

கையுந்துபந்து போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

கையுந்துபந்து போட்டியில் வென்ற மாணவிகளை அமெரிக்கன் கல்லூரி முதல்வா் பால்ஜெயகா் வியாழக்கிழமை பாராட்டினாா். மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிக்களுக்கிடையேயான பெண்கள் கையுந்துபந்து போட்டிகள் சிவகாசி ... மேலும் பார்க்க

வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

மதுரையில் புதன்கிழமை நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். மதுரை பழைய விளாங்குடி 6-ஆவது தெருவைச் சோ்ந்த ஜெயபால் மகன் வீரக்குமாா் (24). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு புத... மேலும் பார்க்க