நாகூரில் கடும் குடிநீா் தட்டுப்பாடு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்புப் போராட்ட வழக்கு: சிறையில் உள்ள மீனவருக்கு நிபந்தனையுடன் பிணை
ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்புப் போராட்டத்தின் போது, நடந்த கலவரத்தில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் உள்ள தூத்துக்குடி மீனவருக்கு நிபந்தனையுடன் பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடியைச் சோ்ந்த சுரேஷ் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து கடந்த 22.05.2018 இல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் தூத்துக்குடியில் விவிடி சிக்னல் , எப்.சி.ஐ. சுற்றுச்சாலை அருகே பணியில் இருந்த பொது ஊழியா்களை போராட்டகாரா்கள் தாக்கினா். மேலும், கற்களை வீசி பொதுச் சொத்துகளை சேதப்படுத்தினா். இதையடுத்து, போலீஸாா் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனா்.
இதுதொடா்பாக சிபிஐ வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டத்தில் நானும் பங்கேற்ாகக் கூறி, என் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு தொடா்ந்து முன்னிலையாகவில்லை எனக் கூறி, மதுரை மாவட்ட நீதிமன்றம் எனக்கு பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் சிபிஐ போலீஸாா் என்னை 19.08.2025 கைது செய்து, மதுரை மத்தியச் சிறையில் அடைத்தனா். மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் நான் போராட்டத்தில் பங்கேற்றேன். ஆனால், எந்தவிதமான வன்முறை செயலிலும் ஈடுபடவில்லை. வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன். எனவே, எனக்கு பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும். மறு உத்தரவு வரும் வரை வாரம் ஒரு முறை விசாரணை நீதிமன்றத்தில் முன்னிலையாகி கையொப்பமிட வேண்டும். மனுதாரருக்கு பிணை வழங்கப்படுகிறது என்றாா் நீதிபதி.