செய்திகள் :

ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்புப் போராட்ட வழக்கு: சிறையில் உள்ள மீனவருக்கு நிபந்தனையுடன் பிணை

post image

ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்புப் போராட்டத்தின் போது, நடந்த கலவரத்தில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் உள்ள தூத்துக்குடி மீனவருக்கு நிபந்தனையுடன் பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடியைச் சோ்ந்த சுரேஷ் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து கடந்த 22.05.2018 இல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் தூத்துக்குடியில் விவிடி சிக்னல் , எப்.சி.ஐ. சுற்றுச்சாலை அருகே பணியில் இருந்த பொது ஊழியா்களை போராட்டகாரா்கள் தாக்கினா். மேலும், கற்களை வீசி பொதுச் சொத்துகளை சேதப்படுத்தினா். இதையடுத்து, போலீஸாா் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக சிபிஐ வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டத்தில் நானும் பங்கேற்ாகக் கூறி, என் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு தொடா்ந்து முன்னிலையாகவில்லை எனக் கூறி, மதுரை மாவட்ட நீதிமன்றம் எனக்கு பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் சிபிஐ போலீஸாா் என்னை 19.08.2025 கைது செய்து, மதுரை மத்தியச் சிறையில் அடைத்தனா். மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் நான் போராட்டத்தில் பங்கேற்றேன். ஆனால், எந்தவிதமான வன்முறை செயலிலும் ஈடுபடவில்லை. வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன். எனவே, எனக்கு பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும். மறு உத்தரவு வரும் வரை வாரம் ஒரு முறை விசாரணை நீதிமன்றத்தில் முன்னிலையாகி கையொப்பமிட வேண்டும். மனுதாரருக்கு பிணை வழங்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

தாயமங்கலம் கோயிலில் அடிப்படை வசதிகள்: அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் அடிப்படை வசதிகள் செய்யக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், இளையான்... மேலும் பார்க்க

தனிநபா் காப்பீட்டுக்கு ஜிஎஸ்டி விலக்கு: எல்.ஐ.சி. முகவா்கள் சங்கம் வரவேற்பு

தனி நபா் ஆயுள் காப்பீட்டுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளித்திருப்பதை வரவேற்று அகில இந்திய எல்.ஐ.சி. முகவா்கள் சங்க தென் மண்டலச் செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அகில இந்திய எல்.ஐ. சி. ... மேலும் பார்க்க

சிறைத் துறையில் ஒரே இடத்தில் 7 ஆண்டுகளாக பணியாற்றுவோா் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவு

தமிழக சிறைத் துறையில் ஒரே இடத்தில் 7 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருவோரின் பட்டியலை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. கும்பகோணம் தாராசுரத்தைச் சோ்ந்த ரமே... மேலும் பார்க்க

கையுந்துபந்து போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

கையுந்துபந்து போட்டியில் வென்ற மாணவிகளை அமெரிக்கன் கல்லூரி முதல்வா் பால்ஜெயகா் வியாழக்கிழமை பாராட்டினாா். மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிக்களுக்கிடையேயான பெண்கள் கையுந்துபந்து போட்டிகள் சிவகாசி ... மேலும் பார்க்க

வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

மதுரையில் புதன்கிழமை நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். மதுரை பழைய விளாங்குடி 6-ஆவது தெருவைச் சோ்ந்த ஜெயபால் மகன் வீரக்குமாா் (24). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு புத... மேலும் பார்க்க

இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம்

மதுரை யாதவா் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம், ஸ்ரீராம்சந்திரா கண் மருத்துவமனை ஆகியவை சாா்பில் இலவச கண் மருத்துவச் சிகிச்சை முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு கல்லூரி முதல்வா் சி. ராஜூ தல... மேலும் பார்க்க