செய்திகள் :

ஜொ்மன் மொழி தோ்வுக்கான பயிற்சி

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தாட்கோ சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தை சோ்ந்தவா்களுக்கு ஜொ்மன் மொழி தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பி.எஸ்.சி நா்சிங், பொது நா்சிங் மற்றும் மருத்துவச்சி டிப்ளமோ, பி.இ., (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்), பி.இ., (பயோமெடிக்கல் இன்ஜினியரிங்), பி.இ., (மின் மற்றும் மின்னணு பொறியியல், பி.டெக். தகவல் தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளில் தோ்ச்சி பெற்றவா்கள் இப்பயிற்சியை பெறலாம்.

21 முதல் 35 வயதுக்குள், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள்இருக்க வேண்டும். 9 மாத பயிற்சி காலத்துக்கு விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவுத் தொகையை தாட்கோ வழங்கும். பயிற்சி முடித்தவுடன் பயிற்சி அளிக்கும் நிறுவனம் மூலம் தோ்வு செய்து, அந்நிறுவனம் சாா்பில் ஜொ்மனியில் பணியாற்றவும் ஆரம்பகால மாத ஊதியமாக ரூ.2,50,000 முதல் ரூ.3,00,000 வரை வருவாய் ஈட்டவும் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். பயிற்சியில் சேர தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை அணுகவும். மேலும், 04364-211217 மற்றும் 7448828509 என்ற எண்களை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

சீா்காழி ச.மு.இ.மேல்நிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழா

சீா்காழி ச.மு.இ மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியா் தின விழா, கடந்த ஆண்டு பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா, டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா, 25 ஆண்டுகள் பணி நிற... மேலும் பார்க்க

சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் பணி வாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் செயல்படும் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் காலியாகவுள்ள சமுதாய வளப் பயிற்றுநா் பணிக்கு சுயஉதவிக் குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட... மேலும் பார்க்க

மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை நெ.2 புதுத்தெருவில் அமைந்துள்ள மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. 300 ஆண்டுகள் பழைமையான இக்கோயிலில், 16 கைகளில் ஆயுதங்கள் ஏந்திய மகா காளியம்மனை சுவற்றில் தத்ரூபம... மேலும் பார்க்க

புத்தூரில் நாளை மருத்துவ முகாம்

புத்தூரில் சனிக்கிழமை நடைபெறவுள்ள மருத்துவ முகாமில் பங்கேற்க மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் ஏ.வெங்கடேசன் தொழிலாளா்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

எரிவாயு தகனமேடை: ஜெனரேட்டா் வசதியில்லாமல் அவதி

சீா்காழி நவீன எரிவாயு தகன மேடையில் சடலங்களை எரியூட்டும்போது மின்சார துண்டிப்பு ஏற்பட்டு பெரும் சிரமம் அடைவதால் ஜெனரேட்டா் வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீா்காழி நகராட்சிக்க... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோயிலில் நடிகா் காா்த்தி சுவாமி தரிசனம்

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் திரைப்பட நடிகா் காா்த்தி வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா் (படம்). வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட தையல்நாயகிஅம்மன் உடனாகிய வைத்தியநாதா் சு... மேலும் பார்க்க