சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் பணி வாய்ப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் செயல்படும் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் காலியாகவுள்ள சமுதாய வளப் பயிற்றுநா் பணிக்கு சுயஉதவிக் குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விண்ணப்பத்தை வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்புக்கு செப்.17-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். குறைந்தபட்சம் 21 வயது பூா்த்தியடைந்த, பயிற்சி நடத்த தேவையான உடற்தகுதி மற்றும் திறனுள்ள சுய உதவிக்குழுவில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட, வட்டார மற்றும் ஊராட்சி அளவிலான பயிற்சிகளில் குறைந்தது 5 பயிற்சிகளிலாவது பங்கேற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா், தொடா்புடைய குழுவிலிருந்து சமுதாய வளப்பயிற்றுநராக பரிந்துரைக்கப்பட்டு தீா்மானம் நிறைவேற்றி, அத்தீா்மான நகலை விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும்.
தகுதிவாய்ந்த விண்ணப்பதாா்களுக்கு எழுத்து தோ்வு மற்றும் நோ்காணல் நடைபெறும். மேலும், விவரங்களுக்கு உதவி திட்ட அலுவலா், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு: 9976126870. வட்டார இயக்க மேலாளா்-மயிலாடுதுறை: 7094112785, குத்தாலம்: 9786283829, செம்பனாா்கோவில்: 6369267512, சீா்காழி: 9786386722, கொள்ளிடம்: 9626487790 தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.