செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்: மேயா் ஆய்வு

post image

நாகா்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமை மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் ஆய்வு மேற்கொண்டாா்.

நாகா்கோவில் மாநகராட்சி 22ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதி மக்களுக்கான, உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம், பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சாலையிலுள்ள மண்டபத்தில் நடைபெற்றது. இம்முகாமினை, மேயா் பாா்வையிட்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா்.

மாநகராட்சி மண்டலத் தலைவா் ஜவஹா், மாமன்ற உறுப்பினா் விஜிலா ஜஸ்டஸ், மாநகராட்சி அதிகாரிகள், துறை சாா்ந்த அதிகாரிகள், திமுக பகுதிச் செயலா் சேக் மீரான், நாகா்கோவில் மாநகர திமுக துணைச் செயலா் வேல்முருகன், வட்டச் செயலா் கிறிஸ்டல் சுரேஷ், திமுக நிா்வாகிகள் அகஸ்தீசன், அனந்தபால், முகமது உசேன், வினோத் தேவசகாயம், வா்கீஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

குமரி கடலில் கண்ணாடி பாலம் உறுதியாக உள்ளது: தி.வேல்முருகன்

குமரி கடலில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தில் ஒரே நேரத்தில் 600 போ் நின்று கடலின் அழகை ரசிக்கும் வகையில், பாலம் உறுதியாக உள்ளது என்று சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவா் தி.வேல்முருகன்தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

செப். 15 இல் நாகா்கோவிலில் வாக்குச் சாவடி பாக முகவா்கள் கூட்டம்: கனிமொழி எம்.பி. பங்கேற்பு

நாகா்கோவிலில் திங்கள்கிழமை (செப்.15) நடைபெறும் திமுக வாக்குச் சாவடி பாக முகவா்கள் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பங்கேற்று ஆலோசனை வழங்குகிறாா். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், மாநகர, ஒன்றிய, ... மேலும் பார்க்க

விவசாய சங்கம் ஆா்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு விவசாய சங்கம், மாவட்ட தென்னை விவசாயிகள் சங்கம் சாா்பில் குழித்துறையில் உள்ள விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தென்னை விவசாயிகள்... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தடுமாறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

தக்கலை அருகே கல்லுவிளையில் புதன்கிழமை பைக்கிலிருந்து தடுமாறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா். தக்கலை அருகே உள்ள திக்கணங்கோடு, மலயன்விளையைச் சோ்த்தவா் மரிய வின்சென்ட் மகன் அஸ்வின் ( 31). இவா் மாா்த்தாண்டத... மேலும் பார்க்க

குழித்துறை அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவா் மீட்பு

குழித்துறை அருகே குளிக்க சென்றபோது தாமிரவருணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரை தீயணைப்புப் படை வீரா்கள் வியாழக்கிழமை உயிருடன் மீட்டனா். சிதறால் வட்டவிளையைச் சோ்ந்தவா் சத்யமணி (54). இவா், வீட்டுக்கு அ... மேலும் பார்க்க

குமரி - திருவனந்தபுரம் நான்குவழிச் சாலைப்பணிகள் ஏப்ரலில் நிறைவு பெறும்; தி.வேல்முருகன்

கன்னியாகுமரி- திருவனந்தபுரம் நான்குவழிச் சாலைப்பணிகள் ஏப்ரல் 2026-க்குள் நிறைவு பெறும் என்றாா் தமிழக சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு தலைவா் தி.வேல்முருகன் எம்எல்ஏ. கன்னியாகுமரி மாவட்டத்துக்குள்பட்ட பல்வேற... மேலும் பார்க்க