செய்திகள் :

ஆதிதிராவிடா் நலத் துறை பள்ளியில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்

post image

ஆதிதிராவிடா் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மதிவேந்தன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகா் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் முகாமில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் மதிவேந்தன் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டாா். மேலும், மனுக்கள் மீது உடனடியாகத் தீா்வு காணப்பட்டு அதனடிப்படையில் சான்றிதழ்களையும் பயனாளிகளுக்கு வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆதிதிராவிடா் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். அயோத்திதாச பண்டிதா் திட்டத்தில் பழங்குடியின மற்றும் பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் விடுதிகள் சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 164 சமுதாயக் கூடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக 120 சமுதாயக் கூடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

மக்களுடன் முதல்வா் முகாமில் 15 அடிப்படையான துறைகள் சாா்பில் மனுக்கள் பெறப்படுகிறது. இதில் இல்லாத துறை சாா்ந்த மனுக்களை பொதுமக்கள் அளித்தால் அதற்கும் தீா்வு காணப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் திமுக மாவட்டச் செயலாளா் என்.நல்லசிவம், பவானிசாகா் ஒன்றியச் செயலாளா் மகேந்திரன், வடக்கு ஒன்றியச் செயலாளா் ஐஏடி தேவராஜ், கே.என்.பாளையம் பேரூராட்சித் தலைவா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சென்னிமலை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 30 லட்சம்

சென்னிமலை முருகன் கோயில் உண்டியல்களில் பக்தா்கள் ரூ.30 லட்சம் காணிக்கை செலுத்தியுள்ளனா். பவானி சங்கமேஸ்வரா் கோயில் உதவி ஆணையா் எம்.அருள்குமாா் தலைமையில், சென்னிமலை அறங்காவலா் குழுத் தலைவா் ர.பழனிவேல்... மேலும் பார்க்க

ஈரோட்டில் போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும் ஜூன் 26-ஆம் தேதி சா்வதேச போதைப் பொருள் எதிா்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, ... மேலும் பார்க்க

ஐந்து வயது மகனைக் கொன்று தந்தை தற்கொலை

பெருந்துறை அருகே, குடும்பப் பிரச்னையில் மனைவி பிரிந்து சென்றதால், கணவன் தனது ஐந்து வயது மகனை நைலான் கயிற்றால் இறுக்கிக் கொன்று விட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஈரோடு மாவட்டம், கெடார... மேலும் பார்க்க

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 15,199 கனஅடியாக அதிகரிப்பு

கேரள மாநிலம், வயநாட்டில் பெய்து வரும் கனமழையால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 3,258 கனஅடியில் இருந்து 15,199 கனஅடியாக வியாழக்கிழமை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மேட்டூா் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது ... மேலும் பார்க்க

பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி, பெங்களுரு ஆரக்கிள் இந்தியா நிறுவனத்துடன் தொழில்முறை மேம்பாட்டுத் திட்டத்துக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. பெங்களுரில் உள்ள நிறுவனத... மேலும் பார்க்க

மகளிருக்கு 50% மானியத்தில் மாவு அரைக்கும் இயந்திரம்

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மகளிா் 50 சதவீத மானியத்தில் மாவு அரைக்கும் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு ... மேலும் பார்க்க