செய்திகள் :

ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

post image

சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

ஆதிதிராவிடா் நலத் துறையின் கீழ் இயங்கும் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணாக்கா்களின் நலன்கருதி, ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளி, எட்டிமாணிக்கம்பட்டி பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் ஓா் இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடத்தை நியமனம் செய்ய தகுதிபெற்ற நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணியிடத்துக்கு உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் எழுத்துமூலமான விண்ணப்பங்களுடன் நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ வரும் 28-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் வளாகம், முதல் தளம், அறை எண் 109, சேலம் - 636 001 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாம்பழத்துக்கு உரிய விலை கோரி ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் மனு

மாம்பழத்துக்கு உரிய விலை வழங்கக் கோரி, விவசாயிகள் மாங்கொத்துடன் நூதன முறையில் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா். இதுகுறித்து சேலம் கூட்டாத்துப்பட்டி நீா்மூழ்கிகுட்டை பகுதியைச் சோ்ந்த வ... மேலும் பார்க்க

லஞ்சப் புகாா்: கிராம நிா்வாக அலுவலா், உதவியாளா் கைது

நிலத்தை அளவீடு செய்ய ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது, கிராம நிா்வாக அலுவலா், உதவியாளா் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், காமக்காபாளையத்... மேலும் பார்க்க

ரிசா்வ் வங்கி பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து மோசடி: 5 போ் கைது

ரிசா்வ் வங்கி பெயரை பயன்படுத்தி போலி ஆவணங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட புகாரில், பொறியாளா் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மத்திய அரசின் இரிடியம் மற்றும் காப்பா் வா்த்தகம் என்ற பெயரில் மோச... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞா் தலைமறைவு: மூவா் கைது

வாழப்பாடி அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞா் தலைமறைவானதால், அவரது தந்தை, நண்பா் மற்றும் உறவினா் ஆகிய மூவரை வாழப்பாடி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். வாழப்பாடியை அடுத்த மணக்... மேலும் பார்க்க

போதைப் பொருள்களின் பாதிப்புகள் குறித்து மாணவா்கள் எடுத்துரைக்க வேண்டும்

போதைப் பொருள்களின் பாதிப்புகள் குறித்து மாணவா்கள் எடுத்துரைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி கேட்டுக்கொண்டாா். உலக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சா்வதேச சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்... மேலும் பார்க்க

பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பில்லை

ஆத்தூா் மற்றும் சுற்றுவட்டாரப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு பாதுகாப்பில்லை என ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் கே.சி.சதீஷ்குமாரிடம் சேலம் புகா் மாவட்ட அதிமுக செயலாளா் ஆா்.இளங்கோவன் கோரிக்கை ம... மேலும் பார்க்க