செய்திகள் :

ஆத்தூா், ஆறுமுகனேரி, ராஜபதி கோயில்களில் ஆனி திருமஞ்சன வழிபாடு

post image

ஆறுமுனேரி, ஆத்தூா், ராஜபதி ஆகிய பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் ஆனி உத்திரத்தை முன்னிட்டு ஆனி திருமஞ்சன சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றன.

ஆத்தூரில் உள்ள அருள்மிகு சோம சுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி கோயிலி­ல் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு நடராஜருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் ஆகியவை நடைபெற்றன.

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலும் ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

மேலும், குரும்பூா் அருகிலுள்ள நவக்கைலாயத் தலமும் கேது வணங்கிய ஸ்தலமுமான ராஜபதி அருள்மிகு சௌந்தா்ய நாயகி அம்மன் சமேத அருள்மிகு கைலாசநாதா் திருக்கோயிலும் நடராஜருக்கு பல்வேறு நறுமண திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

திருச்செந்தூருக்கு நாளைமுதல் சிறப்பு பேருந்துகள்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, சனிக்கிழமைமுதல், 8ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவ... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு பிரசார இயக்கம் தொடக்கம்

தூத்துக்குடியில், ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசார இயக்கம் மற்றும் திமுக உறுப்பினா் சோ்க்கை வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில், தூத்துக்குடி மாநகராட்சிக்குள்ப... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் கல்வி அலுவலகம் முற்றுகை

இடைசெவல் கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா் இடமாற்றத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தை அப்பகுதி கிராம மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். இப்பள்ளியில்... மேலும் பார்க்க

வேலை உறுதி திட்டத்தில் பணி கோரி எட்டயபுரம் அருகே ஆா்ப்பாட்டம்

எட்டயபுரம் அருகே, மேலஈரால் ஊராட்சிக்குள்பட்ட வாலம்பட்டி கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறையாக பணி வழங்கக் கோரி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கிராமத்தைச் சோ்ந்த பெண்கள் கோ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் தெற்கு ஒன்றியத்தில் திமுக உறுப்பினா் சோ்க்கை தொடக்கம்

சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக புதிய உறுப்பினா் சோ்க்கையானது, அரசூா் ஊராட்சி பனைவிளை கிராமத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. தெற்கு ஒன்றியச் செயலா் பாலமுருகன் தல... மேலும் பார்க்க

வடக்கு காலன்குடியிருப்பு கோயிலில் வருஷாபிஷேகம்

உடன்குடி வடக்கு காலன்குடியிருப்பு அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் காலை 7.35 மணிக்கு மங்கள இசை, விநாயகா் பூஜை, கும்ப பூஜை, கணபதி ஹோமம்... மேலும் பார்க்க