செய்திகள் :

``ஆந்திரா இன்று என்ன யோசிக்கிறதோ, அதை நாளை இந்தியா யோசிக்கும்!'' - சந்திரபாபு நாயுடு பேச்சு

post image

ஆந்திரா மாநிலத்தை ஆளும் கட்சியான தெலுங்கு தேசத்தின் மூன்று நாள் மாநாடு நேற்று கடப்பாவில் தொடங்கியது. அப்போது பேசிய ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு...

ரூபாய் நோட்டுகள் வேண்டாம்!

"இப்போது நம்மிடம் டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி உள்ளது. அதனால், ரூ.500, ரூ.1,000, ரூ.2,000 போன்ற பெரிய தொகை கொண்ட பண நோட்டுகள் நமக்கு வேண்டாம். அப்போது தான் நாட்டில் இருந்து ஊழலை அழிக்க முடியும்.

நிகழ்ச்சியில் ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
நிகழ்ச்சியில் ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகளை அழிக்கச் சொல்லி முதலில் குரல் கொடுத்தது நானே. இப்போது ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகளை கொண்டு வந்துள்ளனர். அதையும் அழிக்க வேண்டும்.

பண மதிப்பிழப்பிற்கு பிறகு, இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக, அவர்கள் புதிய பண நோட்டுகளை வழங்கி வருகிறார்கள்.

ஊழல்கள்...

அரசியலில் நடக்கும் ஊழல்களை மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது கட்டுக்கதை. தெலுங்கு தேசக் கட்சி தொடர்ந்து ஊழலுக்கு எதிராகப் போராடி வருகிறது. மேலும், பல லட்ச கோடி ஊழல்களை நம் கட்சி சி.பி.ஐ போல வெளி கொண்டு வந்துள்ளது.

சந்திரபாபு
சந்திரபாபு நாயுடு

நாம் என்ன நினைக்கிறோமோ...

'ஆந்திரா இன்று என்ன யோசிக்கிறதோ, அதை நாளை இந்தியா யோசிக்கும்' என்பது பல முறை நிரூபணமாகி உள்ளது. இந்தியாவில் முன்னோடி நிர்வாக மாதிரிகளான மின் சீர்திருத்தங்கள், பொது-தனியார் கூட்டாண்மை மற்றும் நிர்வாக பொறுப்புக்கூறலை நாம் தான் அறிமுகப்படுத்தினோம்" என்று பேசியுள்ளார்.

Doctor Vikatan: மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! தடுப்பூசி, லாக்டௌன் தேவையா?

Doctor Vikatan: ஒரு வழியாக நம்மைவிட்டுப் போய்விட்டது என நினைக்கவைத்தகொரோனா, மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது. ஒரே நேரத்தில் நான்கு வேரியன்ட்டுகள் பரவுவதாகவெல்லாம்சொல்கிறார்கள். மக்கள் மாஸ்க் அணிவதையே... மேலும் பார்க்க

``குடும்ப அரசியல் என்று எதிர்த்தீர்களே? இப்போது..'' - செய்தியாளர் கேள்விக்கு கமலின் ரியாக்ஷன் என்ன?

மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கமல்ஹாசன் தமிழக முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்துப் பேசியிருக்கிறார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கமல்ஹாசன், "முதல்வரை சந்தித்து நன்றி... மேலும் பார்க்க

``பாகிஸ்தானின் 81% ராணுவ தளவாடங்கள் சீனா உடையது தான்!'' - சசி தரூர் குற்றச்சாட்டு

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க, இந்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்களை அமைத்துள்ளது. அந்தக் குழுக்கள் இப்போது வெளிநாட்டில் பயணம் மேற்கொண்டு வருகின்றன. அதில் நேற்று சசி தரூர் கொலம்பியாவிற்க... மேலும் பார்க்க

`கீழடி ஆய்வறிக்கையை திருப்பி அனுப்பிய இந்திய தொல்லியல் துறை' - கிளம்பிய சர்ச்சையும், விளக்கமும்!

அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடி குறித்த தனது ஆய்வறிக்கையை இந்திய தொல்லியல் துறைக்கு 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் சமர்ப்பித்திருந்தார். இந்த அறிக்கையில் சில மாற்றங்களைச் செய்யுமாறு கடந்த வாரம் திருப்பி அனுப்ப... மேலும் பார்க்க

US Tariffs: `இறக்குமதி வரி ரத்து-க்கு தற்காலிக தடை!' - நீதிமன்ற தீர்ப்பு ட்ரம்ப்-க்கு வெற்றியா?

கடந்த ஏப்ரல் 2-ம் தேதி, பெரும்பாலான உலக நாடுகளுக்கு 'பரஸ்பர வரி'யை விதித்து உத்தரவிட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அந்த நாளுக்கு 'விடுதலை நாள்' என்றும் பெயர் வைத்தார். 'பிற உலக நாடுகள் அமெரிக்காவின் ம... மேலும் பார்க்க

USA: `சீன மாணவர்களுக்கு ஸ்பெஷல் கண்டிஷன்' - வெளிநாட்டு மாணவர்களுக்கு ட்ரம்ப் வைக்கும் செக்!

அமெரிக்காவில் படிப்பு... அமெரிக்காவில் வேலை என்பது இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான உலக நாடுகளில் உள்ள இளைஞர்களின் கனவு. ஆனால், இனி அது அவ்வளவு எளிதாக இருக்காது. இதற்கு காரணம், 'அமெரிக்க அதிபர் ட்ரம்ப்'.அ... மேலும் பார்க்க