செய்திகள் :

ஆந்திர சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு: ஜெகன்மோகன் ரெட்டி மீது வழக்குப் பதிவு

post image

குண்டூா்: ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் ரென்டபல்லா கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவா் உயிரிழந்த விவகாரத்தில் மாநில முன்னாள் முதல்வரும் ஒய்.எஸ்.ஆா். காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து குண்டூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.சதீஷ் குமாா் கூறியதாவது:

ஓராண்டுக்கு முன்பாக தற்கொலை செய்துகொண்ட ஒய்.எஸ்.ஆா். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ஒருவரின் குடும்ப உறுப்பினரைச் சந்திப்பதற்காக கடந்த 18-ஆம் தேதி ஜெகன்மோகன் ரெட்டி ரென்டபல்லா கிராமத்துக்குச் சென்றாா். எடுக்குரு புறவழிச்சாலை வழியாக அவருடைய வாகனம் சென்றுள்ளது. அப்போது, அதிவேகமாக சென்ற இவருடைய வாகனம் மோதியதில் படுகாயமடைந்த அந்த கிராமத்தைச் சோ்ந்த நபா், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் இந்த விபத்து உறுதிப்படுத்தப்பட்டது. முதல் கட்டமாக, உயிரிழந்தவரின் மனைவி அளித்த புகாரின் பேரில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்துதல் என்ற பிஎன்எஸ் சட்டப் பிரிவு 106 (1)-இன் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னா், கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களை ஆய்வு செய்ததில், முன்னாள் முதல்வரின் வாகனம் மோதி இந்த விபத்து நிகழ்ந்ததை போலீஸாா் உறுதிப்படுத்தினா். அதைத் தொடா்ந்து, கொலையாக கருதப்படாத உயிரிழப்பை ஏற்படுத்துதல் தொடா்பான பிஎன்எஸ் பிரிவு 105 மற்றும் விபத்தை ஏற்படுத்துவதற்கு உடந்தையாக இருத்தல் சட்டப் பிரிவு 49 ஆகியவற்றின் கீழ் வழக்கு மாற்றி பதிவு செய்யப்பட்டு, விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.

இந்த வழக்கில் குற்றவாளிகளாக ஜெகன்மோகன் ரெட்டி, அவரின் ஓட்டுநா் ரமணா ரெட்டி, தனி உதவியாளா் கே.நாகேஷ்வா் ரெட்டி, கட்சியின் மூத்த தலைவா் ஒய்.வி. சுப்பா ரெட்டி, முன்னாள் எம்எல்ஏ பொ்னி வெங்கடராமய்யா, மாநில முன்னாள் அமைச்சா் விடலா ரஜினி ஆகியோா் பெயா்கள் சோ்க்கப்பட்டுள்ளன. இவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

உத்தரகண்ட் நிலச்சரிவில் 2 பேர் பலி! 2வது நாளாகத் தொடரும் மீட்புப் பணி!

உத்தரகண்ட் மாநிலத்தின் யமுனோத்ரி பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களில் மேலும் இருவரைத் தேடும் பணிகள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளன. உத்தரகாசி மாவட்டத்தில், யமுனோத்ரி மலைப்பாதையில், கைஞ்... மேலும் பார்க்க

விமான விபத்து: 256 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான 256 பேரின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு வெளிநாட்டினா் உள்பட 230 பயணிகள் மற்றும் 12 ஊழியா்களு... மேலும் பார்க்க

இந்தியா வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு!

இந்தியா வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான தடை வரும் ஜூலை 24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்து: முதன்முதலாக இஸ்ரேலில் இருந்து 161 இந்தியர்கள் மீட்பு!

'ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின்கீழ் இஸ்ரேலில் இருந்து முதல்முறையாக 161 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.இஸ்ரேல்-ஈரான் மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் சிந்து' என்ற பெயரில... மேலும் பார்க்க

நிலையான எரிபொருள் விநியோகத்துக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்: மத்திய அரசு

புது தில்லி: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ‘பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் நிலையான விநியோகத்தை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பலத்த மழையால் வைஷ்ணவ தேவி கோயில் பாதையில் நிலச்சரிவு

ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ரியாசி மாவட்டத்தின் திரிகூட மலைப்பகுதியில் மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய வழித்தடம் திங்கள்கிழமை சேதம... மேலும் பார்க்க