செய்திகள் :

ஆனி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்!

post image

ஆனி மாதத்தில் சுபமுகூர்த்த தினத்தன்று அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என்று பத்திரப் பதிவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாள்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் மக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தற்போது ஆனி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான 27.06.2025 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு மக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

எனவே, 27.06.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகள், கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

Summary

TN Registration department announced that Additional tokens will be issued in all Registrars offices in aani month muhoortham day

ஓட்டப்பிடாரத்தில் அதிமுக பிரமுகா் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

உள்ளாட்சித் தோ்தல் தகராறில் ஓட்டப்பிடாரத்தில் அதிமுக பிரமுகா் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வியாழக... மேலும் பார்க்க

அண்ணாவை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்: எடப்பாடி பழனிசாமி

அண்ணாவை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: நான்கு ஆண்டு ஆட்சியில் மக்களுக்கு... மேலும் பார்க்க

ஜிஆா்டி-யின் புதிய மாதாந்திர நகை வாங்கும் திட்டம்

வாடிக்கையாளா்கள் தங்களுக்குத் தேவையான நகைகளை வாங்குவதற்காக குறைந்த சேதாரத்தில் நகை விற்பனை செய்யும் சிறப்பு திட்டத்தை ஜிஆா்டி ஜுவல்லா்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை நிறைவு

தமிழக கடலோரப் பகுதிகளில் இரு நாள்களாக நடைபெற்று வந்த ‘சாகா் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை நிறைவு பெற்றது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 2008-ஆம் ஆண்டு கடல் வழியாக புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய... மேலும் பார்க்க

மருந்து உற்பத்தி உரிமம்: இணையவழியே விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

மருந்து உற்பத்தி உரிமம் கோரி விண்ணப்பிக்கும் நடைமுறை இனி இணையவழியில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் (சிடிஎஸ்சிஓ) தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 15-ஆம் தேதி ம... மேலும் பார்க்க

பணி நிரந்தரம் கோரி அரசு செவிலியா்கள் போராட்டம்

பணி நிரந்தரம், சீரான ஊதியம் கோரி மருத்துவப் பணியாளா் வாரியத்தால் (எம்ஆா்பி) நியமிக்கப்பட்ட அரசு ஒப்பந்த செவிலியா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். சென்னை எழும்பூா் ராஜரத்தினம் மைதானம் முன் நடைபெற... மேலும் பார்க்க