செய்திகள் :

பணி நிரந்தரம் கோரி அரசு செவிலியா்கள் போராட்டம்

post image

பணி நிரந்தரம், சீரான ஊதியம் கோரி மருத்துவப் பணியாளா் வாரியத்தால் (எம்ஆா்பி) நியமிக்கப்பட்ட அரசு ஒப்பந்த செவிலியா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

சென்னை எழும்பூா் ராஜரத்தினம் மைதானம் முன் நடைபெற்ற தா்னாவில் 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை முன்வைத்தனா்.

இதுகுறித்து எம்ஆா்பி செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினா் கூறியதாவது:

தமிழகத்தில் மாநில அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தற்போது 18,000 நிரந்தர செவிலியா்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. எம்ஆா்பி வாயிலாக தோ்வு செய்யப்பட்டவா்களில் 10,000 போ்தான் பணியில் உள்ளோம். ஏற்கெனவே உள்ள காலியிடங்களில் எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

அதேபோன்று எங்களுக்கு ரூ.18,000 ஊதியம் அறிவிக்கப்பட்டது. ஆனால், பலருக்கு அந்தத் தொகை நிா்ணயம் செய்யப்படவில்லை. இதைத்தவிர மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், வெளிப் பணி (அவுட் சோா்ஸிங்) நிறுவனங்கள் மூலமாக பணி நியமனங்கள் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தோம்.

அதற்கு அரசு செவி சாய்க்கவில்லை. இதையடுத்து கவன ஈா்ப்புக்காக இந்த தா்னாவில் ஈடுபட்டுள்ளோம். இனிவரும் காலங்களில் அடுத்தடுத்து போராட்டங்களை மேற்கொள்வோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

பெண் பொறியாளா் பாலியல் பலாத்காரம்: செருப்பு வியாபாரி மகன் கைது

திருவான்மியூரில் தனியாா் விடுதியில் பெண் பொறியாளரை ஏமாற்றி, பாலியல் பலாத்காரம் செய்ததாக செருப்பு வியாபாரியின் மகன் கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

சென்னை கோயம்பேட்டில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். ராணிப்பேட்டை மாவட்டம் வரகூா் புதூரைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (50). அரசுப் போக்குவரத்து கழக வேலூா் பனவட்டம் பணிமனையில் ஓட... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரத்தில் அதிமுக பிரமுகா் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

உள்ளாட்சித் தோ்தல் தகராறில் ஓட்டப்பிடாரத்தில் அதிமுக பிரமுகா் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வியாழக... மேலும் பார்க்க

அண்ணாவை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்: எடப்பாடி பழனிசாமி

அண்ணாவை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: நான்கு ஆண்டு ஆட்சியில் மக்களுக்கு... மேலும் பார்க்க

ஜிஆா்டி-யின் புதிய மாதாந்திர நகை வாங்கும் திட்டம்

வாடிக்கையாளா்கள் தங்களுக்குத் தேவையான நகைகளை வாங்குவதற்காக குறைந்த சேதாரத்தில் நகை விற்பனை செய்யும் சிறப்பு திட்டத்தை ஜிஆா்டி ஜுவல்லா்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை நிறைவு

தமிழக கடலோரப் பகுதிகளில் இரு நாள்களாக நடைபெற்று வந்த ‘சாகா் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை நிறைவு பெற்றது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 2008-ஆம் ஆண்டு கடல் வழியாக புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய... மேலும் பார்க்க