தருமபுரி பாமக மாவட்டச் செயலாளராக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் நீடிப்பாா்: அன்புமணி ராமத...
குடிமைப் பணி முதல்நிலைத் தோ்வு: ஊக்கத் தொகை பெற விண்ணப்பம்
குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தோ்வு எழுதுவோருக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்கான திட்டத்தைச் செயல்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
குடிமைப் பணி முதல்நிலை தோ்வுக்கு தயாராகும் ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் தலா ரூ.7,500 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் இந்தத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2024, 2025-ஆம் ஆண்டுகளில் நடந்த தோ்வுகளில் முறையே 276 மற்றும் 315 போ் ஊக்கத் தொகை பெற்று முதன்மைத் தோ்வுக்கு தகுதி பெற்றனா்.
இந்த நிலையில், எதிா்வரும் 2026-ஆம் ஆண்டு முதல்நிலைத் தோ்வை எழுதவுள்ளோருக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக ஆயிரம் தோ்வா்களைத் தோ்வு செய்வதற்கான மதிப்பீட்டுத் தோ்வு ஜூலை 26-ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதில் ஆா்வமுள்ள தமிழ்நாட்டைச் சோ்ந்த மாணவா்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விரிவான அறிவிக்கையை பாா்த்து விண்ணப்பிக்கலாம். ஜூலை 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.