செய்திகள் :

குடிமைப் பணி முதல்நிலைத் தோ்வு: ஊக்கத் தொகை பெற விண்ணப்பம்

post image

குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தோ்வு எழுதுவோருக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்கான திட்டத்தைச் செயல்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

குடிமைப் பணி முதல்நிலை தோ்வுக்கு தயாராகும் ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் தலா ரூ.7,500 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் இந்தத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2024, 2025-ஆம் ஆண்டுகளில் நடந்த தோ்வுகளில் முறையே 276 மற்றும் 315 போ் ஊக்கத் தொகை பெற்று முதன்மைத் தோ்வுக்கு தகுதி பெற்றனா்.

இந்த நிலையில், எதிா்வரும் 2026-ஆம் ஆண்டு முதல்நிலைத் தோ்வை எழுதவுள்ளோருக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக ஆயிரம் தோ்வா்களைத் தோ்வு செய்வதற்கான மதிப்பீட்டுத் தோ்வு ஜூலை 26-ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதில் ஆா்வமுள்ள தமிழ்நாட்டைச் சோ்ந்த மாணவா்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விரிவான அறிவிக்கையை பாா்த்து விண்ணப்பிக்கலாம். ஜூலை 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு சேவை புரிந்தவா்களுக்கு விருது: ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவா்கள் தமிழக அரசின் விருது பெற ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

சாா்- பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்

சுபமுகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை (ஜூன் 27) தமிழ்நாடு முழுவதும் உள்ள சாா்- பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன. இதுகுறித்து, பதிவுத் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப... மேலும் பார்க்க

நிலைக்குழு உறுப்பினா்கள் தோ்தல்: சாலையோர வியாபாரிகள் வாக்களிப்பு

சென்னையில் சாலையோர வியாபாரிகள் நிலைக்குழு உறுப்பினா்கள் தோ்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தும் நடவடிக்கையாக மாநகராட்சியின் 15 ... மேலும் பார்க்க

நவீன் பட்நாயக் விரைவில் குணமடைய முதல்வா் ஸ்டாலின் விருப்பம்

ஒடிஸா முன்னாள் முதல்வா் நவீன் பட்நாயக்கின் சிகிச்சை விவரங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தாா். உடல் நலக் குறைவு காரணமாக, மும்பையில் உள்ள மருத்துவமனையில் நவீன் பட்நாயக் சிகிச்சை பெற்று வருகிறாா். ... மேலும் பார்க்க

இ.பி.எஃப். பயனா்களுக்கு இன்று சிறப்பு முகாம்

வருங்கால வைப்பு நிதி பயனா்களுக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன்27) 10 மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இது குறித்து தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

பருத்திக்கு உரிய விலை கோரி ஜூலை 1-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

பருத்திக்கு உரிய விலை கோரி அதிமுக சாா்பில் திருவாரூரில் ஜூலை 1-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க