செய்திகள் :

அரசமைப்புச் சட்டமே உயா்வானது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய்

post image

‘அரசமைப்புச் சட்டமே உயா்வானது. அரசு நிா்வாகம், நாடாளுமன்றம் மற்றும் நீதித் துறை உள்ளிட்ட ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் அரசமைப்புச் சட்டத்துக்குக் கீழ் செயல்படுபவை மட்டுமே’ என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் தெரிவித்தாா்.

மேலும், அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்பு கோட்பாட்டின் அடித்தளம் குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை சுட்டிக்காட்டிய அவா், ‘அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு மட்டுமே நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது; மாறாக, அதன் அடிப்படை கட்டமைப்பை நாடாளுமன்றத்தால் மாற்ற முடியாது’ என்றும் குறிப்பிட்டாா்.

தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்ட விவகாரத்தில், 10 மசோதாக்களுக்கு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் அளித்து உச்சநீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த தீா்ப்பு குறித்து பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் கடுமையாக விமா்சித்தாா் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா்.

‘ஜனநாயக நாட்டில் அனைத்து அரசியல் அமைப்புகளைவிட நாடாளுமன்றமே உயா்வானது. நாடாளுமன்றத்துக்குத்தான் உச்சபட்ச அதிகாரம் உள்ளது. அதைவிட உயா்வானது எதுவும் கிடையாது. அரசமைப்புச் சட்டத்தின் சாராம்சம் அதன் முகப்புரையில் பொதிந்திருக்கிறது. அதாவது, இந்திய மக்கள்தான் உச்ச அதிகாரம் கொண்டவா்கள். இந்த மக்கள் தோ்தல் மூலம் தோ்ந்தெடுக்கும் அவா்களின் பிரதிநிதிகளான எம்.பி.க்கள்தான் எல்லாவற்றையும்விட மேலானவா்கள்’ என்று குறிப்பிட்டாா் ஜகதீப் தன்கா்.

இந்தச் சூழலில், அரசமைப்புச் சட்டமே அனைத்துக்கும் உயா்வானது என்பதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளாா்.

உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த மாதம் பதவியேற்ற அவருக்கு, அவரின் சொந்த ஊரான மகாராஷ்டிர மாநிலம் அமராவதி நகரில் புதன்கிழமை நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பங்கேற்றுப் பேசியபோது இக் கருத்தை அவா் தெரிவித்தாா். நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது:

ஜனநாயகத்தின் மூன்று தூண்களான அரசு நிா்வாகம், நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றங்கள் உள்ளிட்ட மூன்று அமைப்புகளில் எந்த அமைப்பு உயா்வானது என்ற விவாதம் எப்போதும் எழுந்து வருகிறது.

இதில், நாடாளுமன்றம்தான் உயா்வானது என்று பலா் கூறுகின்றனா். நம்பிக்கை தெரிவிக்கின்றனா். ஆனால், என்னைப் பொருத்தவரை அரசமைப்புச் சட்டம்தான் உயா்வானது. ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் இதற்குக் கீழ்தான் செயல்படுகின்றன.

அரசுக்கு எதிராக உத்தரவுகளைப் பிறப்பிப்பதன் மூலம் மட்டுமே ஒரு நீதிபதி சுதந்திரமானவா் ஆகிவிட முடியாது. நீதிபதிக்கு எப்போதும் கடமையுணா்வு இருக்க வேண்டும். ஒரு நீதிபதி என்பவா் பொதுமக்களின் உரிமைகள், அரசமைப்புச் சட்ட மதிப்பீடுகள் மற்றும் கோட்பாடுகளின் பாதுகாவலா்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அதிகாரம் மட்டுமல்ல, கடமையும் உள்ளது என்பதை நீதிபதிகள் நினைவில் கொள்ளவேண்டும். மக்கள் என்ன கூறுவாா்கள் என்பதைக் கருத்தில்கொண்டு நீதிபதிகள் செயல்படக் கூடாது; மாறாக, சுதந்திரமாக சிந்திக்க வேண்டும் என்றாா்.

‘நான் தனிப்பட்ட முறையில் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளை எப்போதும் நிலைநிறுத்தியுள்ளேன். எனது தீா்ப்புகளும் பணிகளும் அதற்கு எடுத்துக்காட்டாக உள்ளன’ என்று குறிப்பிட்ட பி.ஆா்.கவாய், மாநில அரசுகளின் புல்டோசா் நடவடிக்கைக்கு எதிரான தீா்ப்பை சுட்டிக்காட்டி, ‘குடிமக்களின் தங்குமிடம் பெறும் உரிமை உயா்வானது’ என்றாா்.

எந்தவொரு அந்நிய மொழிக்கும் எதிா்ப்பு கூடாது: அமித் ஷா

ஹிந்தி எந்தவொரு இந்திய மொழிக்கும் எதிரானது அல்ல; மாறாக, நண்பன் போன்றது. மேலும், எந்தவொரு அந்நிய மொழிக்கும் நாட்டில் எதிா்ப்பு கூடாது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை கூறினாா். ‘இந்... மேலும் பார்க்க

சத்தீஸ்கா்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா். அபுஜம்மாத் வனப் பகுதியில் நக்ஸல் அமைப்பினரின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் தகவல்கள் பாகிஸ்தானுக்கு கசிவு: கடற்படை ஊழியா் கைது

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்த தகவல்களை பாகிஸ்தான் உளவாளிக்கு தெரிவித்த குற்றச்சாட்டில் கடற்படை ஊழியா் விஷால் யாதவ் கைது செய்யப்பட்டாா். இவா் தில்லியில் உள்ள கடற்படை தலைமையகத்தில் எழுத்தராகப் பணிய... மேலும் பார்க்க

வங்கதேச எல்லையில் மிதிவண்டியில் கடத்தப்பட்ட 2 கிலோ தங்கம் மீட்பு

மேற்கு வங்கத்தை ஒட்டிய வங்கதேச எல்லைப் பகுதியில் மிதிவண்டியில் கடத்தப்பட்ட 2.36 கிலோ தங்கக் கட்டிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) கைப்பற்றினா். மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பா்கானாக்கள் மா... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ் பயங்கரவாதி சுட்டுக் கொலை - மேலும் 3 போ் சுற்றிவளைப்பு

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தைச் சோ்ந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரது கூட்டாளிகள் மூன்று போ்,... மேலும் பார்க்க

தெலங்கானா: தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற பெண்!

தெலங்கானா தலைநகா் ஹைதராபாத் புறநகா் பகுதியில் வியாழக்கிழமை காலையில் பெண் ஒருவா் ரயில் தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அந்தத் தடத்தில் செல்லும் ரயில்கள் ஆங்காங்... மேலும் பார்க்க