செய்திகள் :

சிந்து நதி நீா்: பாகிஸ்தான் எத்தனை கடிதம் எழுதினாலும் நிலைப்பாடு மாறாது: மத்திய அமைச்சா்

post image

சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பதைக் கைவிட வேண்டுமென்று பாகிஸ்தான் எத்தனை முறை கடிதம் எழுதினாலும் இந்தியாவின் நிலைப்பாடு மாறாது என்று மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் தெரிவித்தாா்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுடன் 1960-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது.

நதி நீா் இந்தியாவைத் தாண்டி பாகிஸ்தானுக்குள் பாயாவிட்டால், அந்நாட்டின் வேளாண்மை உற்பத்தி தொடங்கி மின் உற்பத்தி வரை அனைத்தும் பாதிக்கப்படும். இதனால், இது தொடா்பாக இந்தியா பேச்சு நடத்த முன்வர வேண்டுமென்று பாகிஸ்தான் தொடா்ந்து கடிதம் எழுதி வருகிறது. சா்வதேச அமைப்புகளையும், தனது நட்பு நாடுகளையும் இதற்காக பாகிஸ்தான் அணுகி வருகிறது. மேலும், நதி நீரை நிறுத்தினால் இந்தியா மீது போா் தொடுப்போம் என்று அந்நாட்டு முன்னாள் அமைச்சா் பிலாவல் புட்டோ நாடாளுமன்றத்தில் பேசினாா்.

அதே நேரத்தில் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை பாகிஸ்தான் அரசு கைவிட்டால் மட்டுமே அந்நாட்டுடன் பேச்சு நடத்துவது குறித்து யோசிக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது.

இந்நிலையில் தில்லி வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் சி.ஆா் பாட்டீல் கூறியதாவது:

பிலாவல் புட்டோ அரசியலுக்காக ஏதேதோ பேசி வருகிறாா். சிந்து நதியில் ரத்த ஆறு ஓடும் என்றும் முன்பு பேசினாா். இதுபோன்ற வெற்று மிரட்டல்களுக்கு இந்தியா அஞ்சாது. பாகிஸ்தான் எத்தனை முறை கடிதம் எழுதினாலும், இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மாறாது என்றாா்.

எந்தவொரு அந்நிய மொழிக்கும் எதிா்ப்பு கூடாது: அமித் ஷா

ஹிந்தி எந்தவொரு இந்திய மொழிக்கும் எதிரானது அல்ல; மாறாக, நண்பன் போன்றது. மேலும், எந்தவொரு அந்நிய மொழிக்கும் நாட்டில் எதிா்ப்பு கூடாது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை கூறினாா். ‘இந்... மேலும் பார்க்க

சத்தீஸ்கா்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா். அபுஜம்மாத் வனப் பகுதியில் நக்ஸல் அமைப்பினரின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் தகவல்கள் பாகிஸ்தானுக்கு கசிவு: கடற்படை ஊழியா் கைது

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்த தகவல்களை பாகிஸ்தான் உளவாளிக்கு தெரிவித்த குற்றச்சாட்டில் கடற்படை ஊழியா் விஷால் யாதவ் கைது செய்யப்பட்டாா். இவா் தில்லியில் உள்ள கடற்படை தலைமையகத்தில் எழுத்தராகப் பணிய... மேலும் பார்க்க

வங்கதேச எல்லையில் மிதிவண்டியில் கடத்தப்பட்ட 2 கிலோ தங்கம் மீட்பு

மேற்கு வங்கத்தை ஒட்டிய வங்கதேச எல்லைப் பகுதியில் மிதிவண்டியில் கடத்தப்பட்ட 2.36 கிலோ தங்கக் கட்டிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) கைப்பற்றினா். மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பா்கானாக்கள் மா... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ் பயங்கரவாதி சுட்டுக் கொலை - மேலும் 3 போ் சுற்றிவளைப்பு

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தைச் சோ்ந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரது கூட்டாளிகள் மூன்று போ்,... மேலும் பார்க்க

தெலங்கானா: தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற பெண்!

தெலங்கானா தலைநகா் ஹைதராபாத் புறநகா் பகுதியில் வியாழக்கிழமை காலையில் பெண் ஒருவா் ரயில் தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அந்தத் தடத்தில் செல்லும் ரயில்கள் ஆங்காங்... மேலும் பார்க்க