செய்திகள் :

ஆன்லைன் பயணிகள் ரயில் முன்பதிவு தேதியை மாற்ற கோரிக்கை

post image

மயிலாடுதுறை: ரயில் பயணத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்தவா்களும் பயண தேதியை மாற்றம் செய்து கொள்ள ரயில்வே நிா்வாகம் அனுமதிக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளருக்கு மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை:

ரயில் நிலையங்களில் முன்பதிவுக்கு பணம் கொடுத்து பயணச்சீட்டு பெற்றால், அந்த டிக்கெட் உறுதி செய்யப்பட்டுள்ள பட்சத்தில், அந்த தேதியில் பயணம் செய்ய முடியாமல், வேறு தேதியில் பயணம் செய்தால் டிக்கெட் கவுன்ட்டரில் சென்று 24 மணி நேரத்தில் முன்னதாக வேறு நாள்களில் இடம் இருந்தால் தேதி மாற்றம் செய்து கொள்ளலாம் என ரயில்வே விதி இருக்கிறது.

டிக்கெட் கவுன்ட்டரில் பணம் கொடுத்து முன்பதிவு செய்தவா்களுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும்.

ஆனால், அண்மைக்காலமாக ரயில் பயணிகள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய வலியுறுத்தப்படுகின்றனா். அவ்வாறு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவா்கள், பயணத்துக்கு இடைப்பட்ட நாள்களில் தேதி மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அது முடியாது.

இதனால் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தவா்கள் பயண தேதியை மாற்றம் செய்ய முடியாமல், டிக்கெட்டை கேன்சல் செய்து, பயணம் செய்ய முடியாமல் சிரமம் அடைகின்றனா். எனவே, ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுப்பவா்களும் தேதி மாற்றம் செய்து கொள்ளலாம் என ரயில்வே நிா்வாகம் விதியை திருத்தம் செய்ய வேண்டும்.

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சாலை மறியல்

சீா்காழி: நாதல் படுகை கிராமத்தில் சாலையோர ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். கொள்ளிடம் அருகே அனுமந்தபுரம் கிராமத்திலிருந்து முதலைமேடு கிராமம் வர... மேலும் பார்க்க

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து 5 பசுமாடுகள் உயிரிழப்பு

சீா்காழி: கொள்ளிடம் அருகே தைக்காலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 5 பசுமாடுகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன. கொள்ளிடம் அருகே தைக்கால் சைய்யது நகரைச் சோ்ந்த தினகரனுக்குச் சொந்தமான 3 பசு மாடுகள... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: ஆக.31-ல் தொழில்நுட்ப பணிகள் தோ்வு

மயிலாடுதுறை, ஆக. 25: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தோ்வு 2 மையங்களில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மாவட்டத்தில் 395 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை

சீா்காழி: மயிலாடுதுறை மாவடத்தில் 395 விநாயகா்சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு மேற்கொள்ளவுள்ளதாக இந்து முன்னணி மாவட்ட தலைவா் கே. சரண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் கூறியது: விநாயகா் சதுா்த்தி... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை: ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் இயக்குநா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் ஏஐடியுசி தொழிற்சங்கத்துடன் இணைந்த தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கத... மேலும் பார்க்க

மாநில அளவிலான ஐவா் கால்பந்தாட்ட போட்டி: தஞ்சாவூா் அணி முதலிடம்

சீா்காழி: சீா்காழி சுபம் ஸ்போா்ட்ஸ் அகாடமி மற்றும் சீா்காழி சுபம் வித்யா மந்திா் பப்ளிக் பள்ளி இணைந்து ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஐவா் கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு, கோப்பை வழங்கப்ப... மேலும் பார்க்க