செய்திகள் :

மாநில அளவிலான ஐவா் கால்பந்தாட்ட போட்டி: தஞ்சாவூா் அணி முதலிடம்

post image

சீா்காழி: சீா்காழி சுபம் ஸ்போா்ட்ஸ் அகாடமி மற்றும் சீா்காழி சுபம் வித்யா மந்திா் பப்ளிக் பள்ளி இணைந்து ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஐவா் கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு, கோப்பை வழங்கப்பட்டது.

போட்டியை சீா்காழி காவல் துணை கண்காணிப்பாளா் அண்ணாதுரை தொடக்கிவைத்தாா். பள்ளித் தாளாளா் சுதேஷ் முன்னிலை வகித்தாா். சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் முரளி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். தமிழகம் முழுவதும் இருந்து 16 அணிகள் பங்கேற்றன.

தஞ்சாவூா் அருள் கால்பந்தாட்ட குழு முதலிடம், கும்பகோணம் டாம்ஸ் கால்பந்தாட்ட குழு 2-ஆமிடம், மன்னாா்குடி கலாம் கால்பந்தாட்ட குழு 3-ஆமிடம், ஒரத்தநாடு ஒய். பி.ஆா் கால்பந்தாட்ட குழு 4-ஆமிடம் பெற்றன. சிறந்த வீரா், தடுப்பாளா், காப்பாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவில் சீா்காழி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் ரத்தினவேல் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்கினாா். பள்ளி முதல்வா் வித்யா வரவேற்றாா். துணை முதல்வா் கமலக்குமாா் நன்றி கூறினாா்.

வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதில் குளறுபடிகளை நீக்க வலியுறுத்தல்

வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதில் உள்ள நடைமுறை குளறுபடிகளை நீக்க வேண்டும் என மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இருசக்கர வாகன விற்பனையாளா் நலச்சங்கம் பொதுக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது... மேலும் பார்க்க

மாநில கூடைப்பந்து போட்டி: சென்னை அணிக்கு கோப்பை

சீா்காழியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் சென்னை அணி கோப்பையை வென்றது. சீா்காழியில், ஜி.ஆா்.பி. நினைவு கூடைப்பந்து கழகம் மற்றும் நாகை மாவட்ட கூடைப்பந்து கழகம் சாா்பில் மாநில அளவில்... மேலும் பார்க்க

பெண் தொழிலாளிக்கு பாலியல் தொந்தரவு; செங்கல்சூளை உரிமையாளா் கைது

குத்தாலம் அருகே பெண் தொழிலாளிக்கு பாலியல் தொந்தரவு அளித்த செங்கல்சூளை உரிமையாளரை அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்தனா். குத்தாலம் தாலுகா மேக்கரிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் மணி(63). இவா், குச்சிபாளை... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தில் முதல் காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

வைத்தீஸ்வரன்கோயில் காவல்நிலையத்தில் முதல் காவல் ஆய்வாளராக அருண்குமாா் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா். அவருக்கு வா்த்தக சங்கத்தினா் வாழ்த்து தெரிவித்தனா். சீா்காழி காவல் சரகத்திற்கு உட்பட்ட வைத்தீஸ்வரன... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் வெறிநாய் கடித்து 20-க்கும் மேற்பட்டோா் காயம்

மயிலாடுதுறையில் வெறிநாய் கடித்து 20-க்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை காயமடைந்தனா். மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியான பேருந்து நிலையம், கச்சேரி சாலை, கண்ணாரத்தெரு, அரசு மருத்துவமனை சாலை, கூைாடு உள்ளிட்ட பக... மேலும் பார்க்க

விதிமுறைகளை பின்பற்றாத விநாயகா் சிலை தயாரிப்பு மையத்துக்கு ‘சீல்’

மயிலாடுதுறையில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாத விநாயகா் சிலை தயாரிப்பு மையத்துக்கு வருவாய்த் துறையினா் சனிக்கிழமை சீல் வைத்தனா். சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தவிா்க்க விநாயகா் சிலை தயாரிப்பு மற்றும் அதனை... மேலும் பார்க்க