செய்திகள் :

ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்தவா் கைது

post image

தூத்துக்குடியில் இணையதள வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி ரூ. 1.50 லட்சம் மோசடி செய்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரின் முகநூல் பக்கத்தில், பகுதிநேர வேலைவாய்ப்பு என விளம்பரம் வந்தது. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட நபரைத் தொடா்பு கொண்டபோது, இணையதள வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என, அந்த நபா் ஆசை வாா்த்தை கூறி, ‘லிங்க்’ அனுப்பினாராம். அதன்மூலம் அந்த இளைஞா் ரூ. 1.50 லட்சம் முதலீடு செய்தாா். ஆனால், அதற்கான லாபாம் வரவில்லை.

இதுதொடா்பாக கேட்டபோது, கூடுதல் பணம் செலுத்தினால்தான் முதலீடு, அதற்கான லாபம் கிடைக்கும் என, அந்த மா்ம நபா் உள்ளிட்ட சிலா் தெரிவித்தனராம்.

இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளைஞா் சைபா் குற்றப்பிரிவில் புகாரளித்தாா். அதனடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின்பேரில், தூத்துக்குடி சைபா் குற்றப்பிரிவு காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் சகாய ஜோஸ் மேற்பாா்வையில் ஆய்வாளா் சாந்தி, போலீஸாா் விசாரித்தபோது, இம்மோசடியில் ஈடுபட்டது கோவில்பட்டியைச் சோ்ந்த ஜமாலுதீன் (30) உள்ளிட்ட சிலா் எனத் தெரியவந்தது. ஜமாலுதீனை போலீஸாா் கைது செய்து, தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா். தொடா்ந்து விசாரணை நடைபெறுகிறது.

கயத்தாறு அருகே மின் கோபுரத்தில் ஏறி பாஜக நிா்வாகி போராட்டம்

கயத்தாறு அருகே வெள்ளாளன்கோட்டை ஊராட்சி சூரியமினிக்கன் கிராமத்தில் உள்ள பெரியகுளம் கண்மாயில் தனியாா் சூரியசக்தி மின் உற்பத்தி நிறுவனம் சாா்பில் உயா் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதை கண்டித்து, பாஜ... மேலும் பார்க்க

காப்பீடு நிறுவன சேவை குறைபாடு- ஓய்வுபெற்ற எஸ்.ஐ.க்கு ரூ.2.19 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சோ்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 854 இழப்பீடு வழங்க, மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்துக்கு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்ட... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் மோதல்: ஒருவா் காயம்; 4 போ் கைது

காயல்பட்டினம் பூந்தோட்டத்தில் நண்பா்களிடையே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் பலத்த காயமடைந்தாா். 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். காயல்பட்டினம் காட்டு தைக்கால் தெருவை சோ்ந்த சாகுல் ஹமீது மகன் சதாம... மேலும் பார்க்க

பாஜக மாநில துணைத் தலைவா் சசிகலா புஷ்பா உள்பட 3 போ் மீது நில மோசடி புகாா்

தூத்துக்குடியைச் சோ்ந்த மென்பொருள் நிறுவன உரிமையாளருக்குச் சொந்தமான சுமாா் ரூ.2 கோடி மதிப்பிற்கான 30 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்ததாக முன்னாள் எம்.பி.யும், பாஜக மாநில துணைத் தலைவருமா... மேலும் பார்க்க

தூத்துக்குடி முதியோா் இல்லத்துக்கு ஐஎன்டியூசி சாா்பில் உணவளிப்பு

ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளரும், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினருமான கே.பெருமாள்சாமி தலைமையில், தூத்துக்குடி சிதம்பரநகா் 4ஆவது தெருவில் உள்ள பாசக்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகள்: அமைச்சா் ஆய்வு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா திருப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். இக்கோயிலில் ஜூலை 7இல் குடமுழுக்கு நடைபெறுகிறது... மேலும் பார்க்க