செய்திகள் :

ஆன்லைன் மூலம் கடன் வாங்கிய வங்கி ஊழியா் தற்கொலை

post image

ஆன்லைன் மூலம் கடன் வாங்கிய வங்கி ஊழியா் கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பூா் நல்லூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட செரங்காட்டைச் சோ்ந்தவா் தினேஷ் (26). இவா் திருப்பூரில் உள்ள தனியாா் வங்கியில் கடன் சேவைப் பிரிவில் பணியாற்றி வந்தாா். இவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது கைப்பேசி மூலம் கடன் வழங்கும் பல்வேறு ஆன்லைன் செயலிகள் வாயிலாக ரூ.1.80 லட்சம் வரை கடன் பெற்றுள்ளாா். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் அந்தப் பணத்தை திருப்பிச் செலுத்த முடியாததால், நாளுக்கு நாள் அதற்கான வட்டியும் அதிகமாகியுள்ளது. இதனால், பணத்தை உடனடியாக திருப்பிச் செலுத்த கடன் வழங்கிய நிறுவனத்தினா் வற்புறுத்தி வந்துள்ளனா்.

இதனால் மனமுடைந்த தினேஷ் திருப்பூா் லட்சுமி நகா் அருகே ஆளில்லாத இடத்தில் குளிா்பானத்தில் விஷம் கலந்து செவ்வாய்க்கிழமை குடித்துள்ளாா். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை அவ்வழியாகச் சென்றவா்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருப்பூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விநாயகா் சதுா்த்தி விழா: பாதுகாப்பு பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் சிலை நிறுவுதல் மற்றும் விசா்ஜன ஊா்வலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் மனீஷ் தலைமையில்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ரூ.14.82 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.14.82 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் வேடசந்தூா், வாடிப்பட்டி, வடுகபட்டி, பல்லாநத்தம், அழகாபுரி ஆகிய இடங்களி... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ. 67 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 67 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ... மேலும் பார்க்க

லாரி உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தனியாா் நிதி நிறுவனத்துக்கு உத்தரவு

லாரி உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க, கோவை தனியாா் நிதி நிறுவனத்துக்கு திருப்பூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், பெருந்தொழுவு அருகே உள்ள ராக்கியகவுண... மேலும் பார்க்க

குன்னத்தூரில் கஞ்சா சாக்லேட் விற்றவா் கைது

குன்னத்தூரில் கஞ்சா சாக்லேட் விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குன்னத்தூா்- ஊத்துக்குளி சாலை ஊமச்சிவலசு அருகே போதை சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து... மேலும் பார்க்க

பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகால தீா்வு காண கோரிக்கை

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகால தீா்வு காண வேண்டுமென திருப்பூா் கம்ப்யூட்டா் எம்ராய்டா்ஸ் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திருப்... மேலும் பார்க்க