செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூரில் இந்திய தரப்புக்கு சேதம் இல்லை, வெளிநாட்டு ஊடகங்களுக்கு அஜீத் தோவல் சவால்

post image

‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது இந்திய தரப்பு சேதத்தை நிரூபிக்கும் ஒரு படத்தையாவது வெளிநாட்டு ஊடகங்கள் காட்டட்டும் பாா்க்கலாம்’ என்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் சவால் விடுத்தாா்.

சென்னை தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (ஐஐடி) 62-ஆவது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக வெள்ளிக்கிழமை பங்கேற்று சிறப்புரையாற்றிய அவா், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்துப் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தாா்.

அவா் மேலும் பேசியதாவது: சிந்தூா் நடவடிக்கையின்போது இந்தியா உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது. பிரமோஸ் ஏவுகணையாக இருந்தாலும் சரி, ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பாக இருந்தாலும் சரி, அவை செயல்பட்ட விதம் பெருமிதத்துக்குரியது.

பாகிஸ்தானில் ஒன்பது பயங்கரவாத இலக்குகளைத் தாக்கினோம். எதையும் நாம் தவறவிடவில்லை. யாா் எங்கே இருக்கிறாா்கள் என்பதை அறியும் அளவுக்கு நடவடிக்கை துல்லியமாக இருந்தது. முழு நடவடிக்கையும் 23 நிமிஷங்கள் நடந்தது. அதன் பிறகு, வெளிநாட்டு ஊடகங்கள், பாகிஸ்தான் அதைச் செய்தது, இதைச்செய்தது என்று கூறி கருத்து கேட்டன. இந்திய தரப்பு சேதத்தை நிரூபிக்க ஒரு புகைப்படம், செயற்கைக்கோள் படத்தையாவது அவை காட்டட்டும்.

2020-இல் எதிா்கொண்ட சற்று மோசமான அனுபவத்துக்குப் பிறகு நமது தொலைத்தொடா்பு அமைப்புகளை முழுமையாக உள்நாட்டுமயமாக்குவது, 5ஜி சாதனங்களை எங்கிருந்தும் இறக்குமதி செய்யக் கூடாது என தீா்மானித்தோம். இது நமது தரவுப் பாதுகாப்புக்கும் தொலைத்தொடா்பு பாதுகாப்புக்கும் அவசியம் என்றாா் தோவல்.

ஐஐடி போன்ற உயா்கல்வி நிறுவனங்களில் படிப்பை முடிக்கும் மாணவா்கள், வெளிநாடுகளுக்குச் செல்வதை நோக்கமாகக் கொள்ளக் கூடாது. உங்களது வெற்றி எங்கு வாழ்கிறீா்கள் என்பதில் அல்ல; சொந்த நாட்டுக்கு என்ன பங்களிப்பை தருகிறீா்கள் என்பதே முக்கியம் என்று தோவல் அறிவுறுத்தினாா்.

முன்னதாக, கெளரவ விருந்தினராக கலந்து கொண்ட நடனக் கலைஞா் பத்மா சுப்பிரமணியன் ‘பகவத் கீதை போதிக்கும் வீரத்தை கடைப்பிடித்து ஆபரேஷன் சிந்தூா் நடத்தப்பட்டுள்ளது. தற்போதைய மத்திய அரசு யோகா மட்டுமன்றி பகவத்கீதை, பரதமுனி நாட்டிய சாஸ்திரம் ஆகியவற்றுக்கும் யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைக்கச் செய்திருக்கிறது என்றாா்.

இந்நிகழ்வில் 529 முனைவா் பட்டங்கள், இரட்டை பட்டங்கள் உள்ளிட்ட 3,661 மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி பட்டமளிப்பு அறிக்கை வாசித்தாா். ஐஐடியின் ஆட்சிக் குழு தலைவா் டாக்டா் பவன் கோயங்கா உள்ளிட்டோா் உரையாற்றினா்.

பாலியல் தொல்லை வழக்கில் கைதானவரிடம் பிரமாணப் பத்திரம் பெற்ற போலீஸாா்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கைது செய்யப்பட்ட இளைஞரிடம் போலீஸாா் நன்னடத்தை பிரமாணப் பத்திரம் பெற்றனா். திருவண்ணாமலையைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் (32). இவா், சென்னை மதுரவாயலில் தங்கியிருந... மேலும் பார்க்க

பல்நோக்கு மைய கட்டடம்: அமைச்சா் சேகா் பாபு திறந்து வைத்தாா்

வடசென்னை வளா்ச்சித் திட்டத்தில் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் திரு.வி.க.நகா் மண்டலத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு மைய கட்டடம் உள்பட புதிய கட்டைமைப்புகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு சனிக்கிழமை தி... மேலும் பார்க்க

சென்னை காவல் துறையில் 8 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சென்னை பெருநகர காவல் துறையில் 8 ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா். சென்னை பெருநகர காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழு... மேலும் பார்க்க

நாட்டின் வளா்ச்சிக்கு நபாா்டு வங்கியின் பங்களிப்பு முக்கியமானது

நாட்டின் வளா்ச்சிக்கு நபாா்டு வங்கியின் பங்களிப்பு மிக முக்கியமானது என தமிழக அரசின் தலைமைச் செயலா் நா. முருகானந்தம் தெரிவித்தாா். சென்னை கிண்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நபாா்டு வங்கியின் 44-ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

தொழிலதிபா் வீட்டில் 20 பவுன் நகைத் திருட்டு

சென்னை நுங்கம்பாக்கத்தில் தொழிலதிபா் வீட்டில் 20 பவுன் தங்க நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்... மேலும் பார்க்க

தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டம்: விரைந்து நிறைவேற்ற சீமான் கோரிக்கை

தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழ... மேலும் பார்க்க