செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூருக்கு முன்... பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய இரண்டு பதிலடி தாக்குதல் பற்றி தெரியுமா?

post image

ஆபரேஷன் சிந்தூர் என்றப் பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், பாகிஸ்தானிலும் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள பஹாவல்பூர், முரிட்கே, சியால்கோட், பாகிஸ்தான் காஷ்மீரில் உள்ள முசாபராபாத் மற்றும் கோட்லி எனத் தீவிரவாதக் குழுக்களின் 9 முகாம்கள் தாக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்திருக்கிறது.

காஷ்மீர் தாக்குதல்
காஷ்மீர் தாக்குதல்

2016-ல் உரி தாக்குதலுக்கு பதிலடி:

இந்தத் தாக்குதலுக்கு முன்பாக 2016-ம் ஆண்டு ஜம்மு - காஷ்மீரில் உள்ள உரி என்ற இடத்தில் இராணுவ முகாமுக்குள் புகுந்த 4 தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு மற்றும் கைக்குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 19 இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் ஸர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் பல தீவிரவாத முகாம்கள், பாகிஸ்தான் ராணுவ ஆதரவுள்ள இடங்கள் என 6 முதல் 10-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்தது.

2019-ல் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி:

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு 2019-ம் ஆண்டு இந்திய அரசு பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. 2019-ம் ஆண்டு இந்திய ராணுவ வீரர்கள் (CRPF) சென்ற வாகனத்தின் மீது 100 கிலோ வெடி மருந்துடன் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.

இதற்கு பதிலடிதரும் விதமாக இந்தியா பாலகோட் பகுதியில் உள்ள ஜைஷ் முகாம்களை விமானப்படையின் வழியாக தாக்கி அழித்தது. மேலும் இந்தத் தாக்குதலில் 200–300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக உளவுத்துறை கூறியது.

புல்வாமா தாக்குதல்

ஆனால் பாகிஸ்தான் இதை மறுத்து, “யாரும் இறக்கவில்லை, வெறும் காட்டில் குண்டு வீசப்பட்டது” எனக் கூறியது. சர்வதேச ஊடகங்கள் மற்றும் ஏஜென்சிகளும் பாதிப்புகள் குறித்த தகவல்களை உறுதிப்படுத்த இயலவில்லை. அதே நேரம், பாலகோட் தாக்குதல் இந்தியாவின் இராணுவ வரலாற்றில் ஒரு முக்கியமான வான்வழித் தாக்குதலாகவும், தீவிரவாதத்திற்கு எதிரான வலுவான எச்சரிக்கையாகவும் கருதப்பட்டது குறிப்பிடதக்கது.

India - Pakistan : "முடிவெடுப்பதில் இரு நாடுகளுக்கும் உதவ முடிந்ததில் பெருமை கொள்கிறேன்" - ட்ரம்ப்

பஹல்காம் தாக்குதலுக்கு (ஏப்ரல் 22) பதிலடியாக, தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் (மே 7) நடத்தியது. அதைத் தொடர்ந்து, மே 8-ம் தேதி இரவு ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகள் மீது பாகிஸ்தான் ட்ர... மேலும் பார்க்க

”திமுக ஆட்சி மத்தியில் கூட்டணி ஆட்சி, மாநிலத்தில் குடும்ப ஆட்சியாக மாறிவிட்டது”-சீமான்

தஞ்சாவூரில் தமிழ்த்தேசிய பேரியக்கம் சார்பில் கூட்டரசுக் கோட்பாடு சிறப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பெ.மணியரசன், சீமான், கி.வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிறைவாக சீமான் பேசியதாவது, "மத்தியி... மேலும் பார்க்க

`இந்தியா, பாக் பிரச்னையில் அமெரிக்கா ஏன்..?' - காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கேள்வி!

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது. இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தீவிரவாத மையங்கள் அழிக்கப்பட்டன. இதனால் பாகிஸ்த... மேலும் பார்க்க

India - Pakistan : "பாகிஸ்தான் அதை நிறுத்தும்வரை நிரந்தர அமைதியே கிடையாது" - ஒவைசி சொல்வதென்ன?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு (ஏப்ரல் 22) பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் (மே 7) நடத்தியது... மேலும் பார்க்க

Russia - Ukraine: முடிவுக்கு வருகிறதா ரஷ்யா vs உக்ரைன் போர்; பேச்சுவார்த்தைக்கு புதின் அழைப்பு!

அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ (NATO) அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீது போர் தொடுக்க ஆரம்பித்தது.அதன்பிறகு, எத்தனையோ பேச்சுவார்த்தைகள், அமெரிக்க ... மேலும் பார்க்க