செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூர் : தீவிரவாத தலைமையிடம் டு பயிற்சிக் கூடம் - ராணுவம் குறிவைத்த 9 இடங்களின் பின்னணி

post image

ஜம்மு & காஷ்மீர் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக 'ஆபரேஷன் சிந்தூர்' -ஐ நடத்தியுள்ளது இந்தியா.

இந்த ராணுவத் தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களை குறி வைத்து தாக்கி உள்ளது இந்தியா.

இந்த ஒன்பது இடங்களில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் இருந்திருக்கின்றனர்.

ஆபரேஷன் சிந்தூர் :
ஆபரேஷன் சிந்தூர் :

ஏன் இந்த ஒன்பது இடங்கள்?

இந்த ஒன்பது இடங்களும் கடந்த காலங்களில் இந்தியா மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் தொடர்புடையது மற்றும் இந்தியாவிற்குள் தீவிரவாதிகள் உள்நுழைய அதிகம் முயற்சிக்கும் இடங்கள் ஆகும்.

இதை வைத்து இந்திய ராணுவம் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்த இடங்களை தேர்ந்தெடுத்துள்ளது.

இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய இடங்களை பற்றி...

பஹவல்பூர்: இது பாகிஸ்தானின் தெற்கு பஞ்சாப் மாகாணத்தில் அமைந்திருக்கும் ஆகும். இது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதக் குழுவின் தலைநகரம் என்று கூறப்படுகிறது. இந்தக் குழுவின் தலைவர் மசூத் அசார்.

2001-ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தாக்குதல், 2019-ம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல்கள் இந்த அமைப்பினால் தான் நடத்தப்பட்டது.

முரிட்கே: லாகூர் அருகில் இருக்கும் முரிட்கே லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முகாமாகும். இந்த இடத்தில் தீவிரவாத பயிற்சி கூடம், ஆயுதக் கூடம், ஆயுத போக்குவரத்து போன்றவை அமைந்துள்ளது.

2008 மும்பை தாக்குதலுக்கும், இந்த அமைப்பிற்கும் சம்பந்தம் உள்ளது என்று இந்திய அரசால் கூறப்படுகிறது.

மெஹ்மூனா: இது ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் இடம் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக, இந்த அமைப்பு எந்த தீவிரவாத செயல்களிலும் ஈடுபடவில்லை தான். ஆனால், தீவிரவாதப் பயிற்சிகள் இங்கே நடந்துகொண்டே தான் இருக்கிறது என்று இந்திய ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்திய ராணுவம்
இந்திய ராணுவம்

கோட்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளது கோட்லி. இங்கே தற்கொலை படையினர், கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகின்றனர். கோட்லியில் எந்த நேரத்திலும் 50 பேருக்கு பயிற்சிகள் வழங்க முடியும் என்று தகவல்கள் கூறுகின்றது.

குல்பூர், சவாய், சர்ஜால், பர்னாலா ஆகிய இடங்களும் இந்தத் தாக்குதலில் தகர்க்கப்பட்டுள்ளது. இந்த இடங்களிலும் தீவிரவாதப் பயிற்சி, தீவிரவாதிகளின் ஆயுத குவிப்பு போன்றவை நடைபெற்று வந்தது தான் இதற்கான காரணம்.

இந்தியா - பாக்., எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்; பாதுகாப்பு அமைச்சகத்தின் 10 முக்கிய நடவடிக்கைகள்!

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரால் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை அதிகரித்து வருகிறது.இதனால், இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அவ... மேலும் பார்க்க

Operation Sindoor : 15 இடங்களை குறிவைத்த பாகிஸ்தான்; வானிலே முறியடித்த இந்திய ராணுவம் - முழுத் தகவல்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு எ... மேலும் பார்க்க

மோடி 'ஆப்சென்ட்', 'இன்னும் ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை'... - அனைத்துக் கட்சி கூட்ட நிகழ்வுகள்

நேற்று அதிகாலையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதக் கூடங்களை குறிவைத்து தாக்கியது இந்திய ராணுவம். இந்தத் தாக்குதலுக்கு இந்திய அரசு 'ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயரிட்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி: எல்லையில் தயார் நிலையில் டிரோன் எதிர்ப்பு கருவிகள்; விமான நிலையங்கள் மூடல்

சமீபத்தில் காஷ்மீரில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த தயாராகி வந்தது. நேற்று நாடு முழுவதும் போர்ஒத்திகை நட... மேலும் பார்க்க

திமுக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்; துரைமுருகனிடமிருந்து கனிம வளத்துறை பறிப்பு!

தமிழக அமைச்சரவையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அமைச்சரவை மாற்றம் நடந்திருந்தது. பணமோசடி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பால், செந்தில் பாலாஜி கவனித்துவந்த மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை முத்... மேலும் பார்க்க

Pakistan: லாகூரில் குண்டுவெடிப்பு சத்தம்; மீண்டும் தாக்குதலா... என்ன நடந்தது?

கிழக்கு பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் வியாழக்கிழமை (மே 8) காலையில் குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் இந்தியா பாகிஸ்தானில் பல பகுதிகளில் தாக்குத... மேலும் பார்க்க