செய்திகள் :

‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயருக்கு காப்புரிமை! ரிலையன்ஸ் உள்பட 6 நிறுவனங்கள் விண்ணப்பம்!

post image

‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயருக்கு காப்புரிமை கோரி அம்பானியின் ரிலையன்ஸ் உள்பட 6 நிறுவனங்கள் விண்ணப்பம் அளித்துள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ஆயுதப் படைகள் புதன்கிழமை அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின. இதில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் கோட்டையான பஹவல்பூர் மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவின் தளமான முரிட்கே ஆகியவை அழிக்கப்பட்டன. இந்த அதிரடி தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.  

இந்த நிலையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரை வர்த்தக ரீதியில் பயன்படுத்துவதற்காக அம்பானியின் ரிலையன்ஸ் உள்பட பல்வேறு நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை அளித்திருக்கின்றன. இதில், ரிலையன்ஸ் உள்பட 6 நிறுவனங்கள் காப்புரிமை வடிவமைப்பு மற்றும் வர்த்தக முத்திரைகளின் கட்டுப்பாட்டு இயக்குநரை அணுகியுள்ளனர்.

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, ரிலையன்ஸ் இன்க் மற்றும் ஐந்து நிறுவனங்கள் வர்த்தக முத்திரை கோரி விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளன.

ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தவிர, முகேஷ் சேத்ராம் அகர்வால், குரூப் கேப்டன் கமல் சிங் ஓபர், அலோக் கோத்தாரி, ஜெயராஜ் மற்றும் உத்தம் ஆகியோரும் விண்ணப்பித்துள்ளனர்.

சிந்தூர் என்பது என்ன?

சிந்தூர் என்பது திருமணமான பெண்கள் நெற்றியில் இடும் குங்குமத்தைக் குறிக்கும் என்பதால், தங்களது கண் முன்னே கணவர், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பார்த்த, இந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் கணவனை இழந்த பெண்களின் குங்குமத்துக்கு பதில் சொல்லும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், இந்தப் பெயரை பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரை செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க:ஆபரேஷன் சிந்தூர்! புல்வாமா தாக்குதலுக்கு மூளையான பயங்கரவாதி கொலை

பஞ்சாபில் அடுத்த 3 நாள்களுக்கு அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடல்!

பஞ்சாபில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களையும் அடுத்த 3 நாள்களுக்கு மூடுவதற்கு பஞ்சாப் அரசாங்கம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் வெடித்துள்ளதைத் தொடர்ந்து, எ... மேலும் பார்க்க

போர் சூழல்: சிஏ தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று (மே 9) முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறவிருந்த பட்டய கணக்காளருக்கான சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக இந்தியப் பட்டயக் கணக்காளர் கழ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஊரடங்கு அமல்!

புது தில்லி: பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு - காஷ்மீரில் இன்றிரவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால், இந்தியா - பாகிஸ்தான் இடையே தீவிர சண்டை ... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் அரசு ஊழியர்களின் விடுமுறை ரத்து; எல்லையோர மாவட்டங்களுக்கு ரூ.5 கோடி விடுவிப்பு!

ராஜஸ்தானில் உள்ள அரசு ஊழியர்களுக்கு விடுமுறையை ரத்து செய்து அம்மாநில முதல்வர் பஜன்லால் சர்மா உத்தரவிட்டுள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டுள்ள நிலையில், எல்லையோர மாநிலங்களில் தாக்குதல்கள் அத... மேலும் பார்க்க

களமிறங்கியது கடற்படை: பாகிஸ்தானின் கராச்சியில் தாக்குதல்!

பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் இந்திய கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவம், விமானப் படையைத் தொடர்ந்து தற்போது தற்போது கடற்படையும் நேரடித் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.இந்த... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் நேரடி பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஆதரவு!

இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.ஜம்மு - காஷ்மீரில் இன்றிரவில் பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும் இந்திய எல்லைக்குள் பறந்த பாகிஸ்தான் போர் ... மேலும் பார்க்க