செய்திகள் :

ஆப்கனில் தொடர் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவு!

post image

ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 160 கி.மீ. ஆழத்தில் இன்று (மார்ச் 27) காலை 8.38 மணியளவில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு நிலையம் அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்திய நேரப்படி மதியம் 1.58 மணியளவில் அந்நாட்டின் நிலப்பரப்பிலிருந்து 180 கி.மீ ஆழத்தில் 5.2 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதினால் உண்டான பாதிப்புகள் குறித்து எந்தவொரு தகவலும் தற்போது வெளியிடப்படவில்லை.

முன்னதாக, கடந்த மார்ச் 23 அன்று சுமார் 138 கி.மீ. ஆழத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும், மார்ச் 21 அன்று 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஆப்கானிஸ்தான் நாடானது இந்தியா மற்றும் யூரேசியா டெக்டோனிக் தகடுகளின் இடையில் பல்வேறு பிளவுக்கோடுகளின் மீது அமைந்துள்ளது. எனவே, அந்நாட்டின் நிலப்பகுதியானது நிலநடுக்கம் மற்றும் பெருவெள்ளம் ஏற்படுவதற்கு அபாயம் மிகுந்ததாக ஆய்வாளர்கள் கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சிலி அதிபர் இந்தியா வருகை!

ஹைதி: முக்கிய நகரத்தைத் தாக்கி 500 சிறைக் கைதிகளை விடுவித்த குழுக்கள்!

ஹைதி நாட்டின் முக்கிய நகரத்தில் தாக்குதல் நடத்திய குற்றவாளி குழுக்கள் அங்குள்ள சிறையிலிருந்து சுமார் 500 சிறைக் கைதிகளை விடுவித்துள்ளனர். மத்திய ஹைதியின் மிரேபலாசிஸ் நகரத்தில் இரண்டு வெவ்வேறு குற்றவாள... மேலும் பார்க்க

போட்டியின் நடுவே மயங்கிய முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் மரணம்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் போட்டியின் நடுவே மயங்கி விழுந்த நைஜீரிய குத்துச்சண்டை வீரர் ஒருவர் மரணமடைந்துள்ளார். நைஜீரியா நாட்டைச் சேர்ந்த முன்னாள் தேசிய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க குத்துச்சண்டை ச... மேலும் பார்க்க

எல்லையைக் கடந்து பரவும் தொற்றினால் 10 லட்சம் பேருக்கு ஆபத்து! காப்பாற்றுமா அரசின் திட்டம்!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் வேகமாகப் பரவி வரும் காலரா நோயினால் சுமார் 10 லட்சம் பேர் அபாயத்திலுள்ளதாகக் கூறப்படுகின்றது.தெற்கு சூடான் நாட்டுடனான எல்லையில் எத்தியோபியாவின் தென் மேற்கிலுள... மேலும் பார்க்க

ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து டி20-யிலும் சிறப்பாக செயல்பட விரும்பும் ஆப்கன் வீரர்!

டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட விரும்புவதாக ஆப்கானிஸ்தான் அணியின் பிரபல ஆல்ரவுண்டர் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான அஸ்மதுல்லா ஓமர்ஸாய், கடந்... மேலும் பார்க்க

விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் உரிமைத் தொகை! - தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் விடுபட்டோருக்கு இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியத்திற்குள்பட்ட வெற்றிலைமுருகன்பட்டி, ... மேலும் பார்க்க

7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு: அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி,கன்னியாகுமரி,போளூர், செங்கம், சங்ககிரி, கோத்தகிரி, அவினாசி, பெருந்துறை ஆகிய 7 ... மேலும் பார்க்க