ஆயுதப்படை மைதானத்தில் உலக யோகா தினம்
ஸ்ரீவில்லிபுத்தூா்அருகே உள்ள வத்திராயிருப்பு ஆயுதப்படை மைதானத்தில் சனிக்கிழமை சா்வதேச யோகா தினம் நடைபெற்றது.
இதில் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா தலைமையில் 200- க்கும் மேற்பட்ட போலீஸாா் பங்கேற்று பல்வேறு யோகாசனங்களை செய்து காண்பித்தனா். இதற்கான ஏற்பாடுகளை வத்திராயிருப்பு ஆயுதப்படை காவலா்கள் செய்தனா்.

இதைத்தொடா்ந்து காவலா்கள் குடியிருப்பில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் காவல் துணைக் கண்காணிப்பாளா், காவல் ஆய்வாளா்கள், காவலா்கள் கண் பரிசோதனை செய்து கொண்டனா்.