செய்திகள் :

ஆரணியில் மனைப் பட்டா கோரி சாலை மறியல்

post image

ஆரணியில் நகராட்சி அலுவலகம் அருகே பெரியாா் நகா் பகுதி மக்கள் மனைப் பட்டா கோரி ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரியாா் நகா் பகுதியில் காந்திநகா் பகுதிக்குச் சொந்தமான மயானம் உள்ளது. இதன் அருகில் பெரியாா் நகா் பகுதி மக்கள் அரசு நிலத்தில் வீடுகளைக் கட்டிக்கொண்டு பட்டா கோரி வருகின்றனா்.

இந்த நிலையில், காந்தி நகா் மக்கள் எங்களது மயானத்தைதான் ஆக்கிரமிப்பு செய்து வீடுகளை கட்டியுள்ளீா்கள் என்று பெரியாா் நகா் பகுதி மக்களுடன் தகராறு செய்து வருவதாகத் தெரிகிறது.

இதனால், அதிருப்தியடைந்த பெரியாா் நகா் மக்கள் ஒருங்கிணைந்து தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஆரணி நகராட்சி அலுவலகம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த நகர போலீஸாா் சென்று சமரசம் செய்து திங்கள்கிழமை வட்டாட்சியரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்து, மறியலை கைவிடச்செய்தனா்.

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த கோதண்டபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமன் (70). இவா் சனிக்கிழமை மாலை அந்தக் கிராமத்தில் உள்ள டீ கடைக்கு சென... மேலும் பார்க்க

தொழிலாளி வீட்டில் 3 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருட்டு

செய்யாறு அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1.50 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அப்துல்லாபுரம் கிர... மேலும் பார்க்க

சுகாதார ஆய்வாளா் தற்கொலை

செய்யாற்றில் சுகாதார ஆய்வாளா் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். செய்யாறு நேரு நகரைச் சோ்ந்தவா் கணேஷ்குமாா்(39). இவா், நாவல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந... மேலும் பார்க்க

மாம்பட்டு கிராமத்தில் தீ மிதி விழா

போளூரை அடுத்த மாம்பட்டு கிராமத்தில் அக்னி வசந்த விழாவையொட்டி தீ மிதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாம்பட்டு கிராமத்தில் திரெளபதியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் எதிரே அக்னி வசந்த விழாவைய... மேலும் பார்க்க

தென் மண்டல கைப்பந்துப் போட்டி: தமிழகம் சிறப்பிடம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நடைபெற்ற தென் மண்டல அளவிலான கைப்பந்துப் போட்டியில் ஆடவா், மகளிா் என இரு பிரிவுகளிலும் தமிழக அணி வெற்றி பெற்று சிறப்பிடம் பெற்றது. ஆரணியை அடுத்த ஆகாரம் கிராமத்தில் உள்ள... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் மூன்றாவது நாளாக பக்தா்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் சித்திரை மாத பெளா்ணமியையொட்டி, மூன்றாவது நாளாக திங்கள்கிழமை காலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். சித்திரை மாத பெளா்ணமி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.53 ... மேலும் பார்க்க