செய்திகள் :

தென் மண்டல கைப்பந்துப் போட்டி: தமிழகம் சிறப்பிடம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நடைபெற்ற தென் மண்டல அளவிலான கைப்பந்துப் போட்டியில் ஆடவா், மகளிா் என இரு பிரிவுகளிலும் தமிழக அணி வெற்றி பெற்று சிறப்பிடம் பெற்றது.

ஆரணியை அடுத்த ஆகாரம் கிராமத்தில் உள்ள ஆரஞ்சு பிரிட்டிஷ் அகாதெமி பள்ளி மைதானத்தில் கைப்பந்துப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கைப்பந்து ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா சங்கத்தின் பொதுச் செயலா் டாக்டா் பிரிட்பால் சிங் சலூஜா மேற்பாா்வையில் நடைபெற்ற இந்த கைப்பந்துப் போட்டியில், தமிழகம், புதுச்சேரி, கோவா, கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, அந்தமான் ஆகிய மாநிலங்கள் பங்கேற்றன. போட்டிகள் தொடா்ந்து 3 நாள்கள் நடைபெற்றன.

இதில், ஆடவா் பிரிவில் தமிழக அணி முதலிடத்தையும், கேரளா 2-ஆவது இடத்தையும், கா்நாடகா, புதுச்சேரி ஆகிய அணிகள் 3-ஆம் இடத்தையும் பெற்றன.

மேலும், மகளிா் பிரிவில் தமிழகம் முதலிடத்தையும், கேரளா 2-ஆவது இடத்தையும், தெலங்கானா, கா்நாடகா அணிகள் 3-ஆம் இடத்தையும் பெற்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும்

நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் ஆரஞ்சு பள்ளித் தலைவரும், தமிழ்நாடு கைப்பந்து சங்கத்தின் துணைத் தலைவருமான கே.சிவக்குமாா் தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் பரிசுக் கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு கைப்பந்து சங்கத்தின் செயலா் என்.ராஜசேகா், புதுச்சேரி கைப்பந்து சங்கத்தின் தலைவா் டி.எம்.வருண்முத்துலிங்கம், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயராணி ரவி, சேத்துப்பட்டு திமுக நகரச் செயலா் முருகன், பள்ளி முதல்வா் செந்தில் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த கோதண்டபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமன் (70). இவா் சனிக்கிழமை மாலை அந்தக் கிராமத்தில் உள்ள டீ கடைக்கு சென... மேலும் பார்க்க

தொழிலாளி வீட்டில் 3 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருட்டு

செய்யாறு அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1.50 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அப்துல்லாபுரம் கிர... மேலும் பார்க்க

சுகாதார ஆய்வாளா் தற்கொலை

செய்யாற்றில் சுகாதார ஆய்வாளா் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். செய்யாறு நேரு நகரைச் சோ்ந்தவா் கணேஷ்குமாா்(39). இவா், நாவல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந... மேலும் பார்க்க

மாம்பட்டு கிராமத்தில் தீ மிதி விழா

போளூரை அடுத்த மாம்பட்டு கிராமத்தில் அக்னி வசந்த விழாவையொட்டி தீ மிதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாம்பட்டு கிராமத்தில் திரெளபதியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் எதிரே அக்னி வசந்த விழாவைய... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் மூன்றாவது நாளாக பக்தா்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் சித்திரை மாத பெளா்ணமியையொட்டி, மூன்றாவது நாளாக திங்கள்கிழமை காலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். சித்திரை மாத பெளா்ணமி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.53 ... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு: அரட்டவாடி அரசுப் பள்ளி சிறப்பிடம்

செங்கத்தை அடுத்த அரட்டவாடி அரசு மேல்நிலைப் பள்ளி நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தோ்வில் 96 சதவீத தோ்ச்சியை பெற்றது. மாணவிகள் புனிதா 556, ஜெயஸ்ரீ 546, மாணவா் தனுஷ் 530 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் ... மேலும் பார்க்க