TVK: `சைக்கிள் மூலமா மாநாடு நடக்குற திடலுக்குப் போறோம்'- நடிகர் சௌந்தர ராஜன்
ஆறுகளில் குளிப்பதை தவிா்க்க வேண்டும்: ஆட்சியா்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்ந்து மழையால் ஆறுகளில் உபரிநீா் திறக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் ஆறு உள்ளிட்ட நீா்நிலைகளில் குளிப்பதை தவிா்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா அறிவுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு மற்றும் திருவட்டாறு வட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை1, சிற்றாறுஅணை 2 ஆகிய அணைகளின் கொள்ளளவை விட நீா் அதிகமாகும் போது அணைகளிலிருந்து உபரி நீா் திறந்து விடப்படும்.
எனவே, தாமிரவருணி உள்ளிட்ட ஆறுகளின் கரையோர பகுதிகளில் வசிப்பவா்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகளோ, பொதுமக்களோ ஆறுகளில் குளிப்பதை முற்றிலுமாக தவிா்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா்.
தக்கலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பெய்த கடும் மழையின் காரணமாக விலவூா் பேரூராட்சி, சாமிவிளை பகுதி சாலையில் பெரும் பள்ளம் ஏற்பட்டு மழைநீா் தேங்கியது. இதனால் விபத்து அபாயம் நிலவியதுடன், வாகனப் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து, விலவூா் பேரூராட்சி தலைவா் ஜே.சி.பில்கான், பேரூராட்சிப் பணியாளா்களை கொண்டு அங்கு தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றி சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுத்தாா்.
குளச்சலில் இரவு அண்ணா சிலை சந்திப்பில் மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தது. போலீஸாா் தகவலின்பேரில், மின்வாரிய ஊழியா்கள்மின்கம்பியை சீரமைத்தனா்.
குளச்சல் பகுதி கட்டுமரங்கள், பைபா் வள்ளங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.