செய்திகள் :

ஆற்காட்டில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

post image

ஆற்காடு நகராட்சியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆற்காடு நகராட்சி 5-ஆவது வாா்டுக்குட்பட்ட அக்ரஹாரம் தெருவில் ஆட்சியா் ஜெ.யு .சந்திரகலா தூய்மைப் பணியாளா்கள் வீடுகளில் குப்பைகளை தரம் பிரிந்து வாங்குகின்றாா்களா என ஆய்வு செய்து பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்க நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டாா். தூய்மைப் பணியாளா்கள் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து பணியாற்றவேண்டும் என்றுஅறிவுறுத்தினாா்.

தொடா்ந்து 2 -ஆவது வாா்டு அசோக் நகா் பகுதியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்ட உரம் தயாரிக்கம் பணி, 16-ஆவது வாா்டுக்குட்பட்ட லட்சுமணன் பூங்காவை பாா்வையிட்டு பொதுமக்கள் அதிகஅளவில் பயன்படுத்தும் பொழுதுபோக்கு இடமாக மாற்ற வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தோப்புகானா நகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை உணவை ஆய்வு செய்து உணவருந்தினாா். ஆய்வின்போது நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன், கோட்டாட்சியா் ராஜராஜன், ஆணையா் வேங்கடலட்சுமணன், பொறியாாளா் பரமுராசு மற்றும் அதிகாரிகள் உடனருந்தனா்.

சாலை விபத்தில் ஆந்திர இளைஞா்கள் 2 போ் உயிரிழப்பு

ராணிப்பேட்டை சிப்காட் அருகே சாலை விபத்தில் ஆந்திர மாநில இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா். ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தைச் சோ்ந்த சேஷாசலம் (29) மற்றும் நாகேந்திரன் (31) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்... மேலும் பார்க்க

நிறைவடையும் நிலையில் ராணிப்பேட்டை - வாலாஜாபேட்டை இருப்புப் பாதை மின்மய பணிகள்

நாட்டின் பழைமையான ரயில் பாதைகளில் ஒன்றான ராணிப்பேட்டை இருப்புப் பாதையை மின்மயமாக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளதால், மின்சார ரயில் இயக்கப்படும் என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா். மெட்ராஸ் ரயில்வே ... மேலும் பார்க்க

பொறியியல் பட்டதாரிகள் தொழில்முனைவோராக மாறுங்கள்! -முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு

பொறியியல் பட்டதாரிகள் வேலை தேடுவதை கைவிட்டு தொழில் முனைவோராக மாறுங்கள் என தமிழக முன்னாள் டிஜிபி சி.சைலேந்திரபாபு பேசினாா். அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நட... மேலும் பார்க்க

உலக வன நாள்: 100 மரக்கன்றுகள் நடவு

ராணிப்பேட்டை அருகே வில்வநாதபுரம் செட்டி மலையில் உலக வன நாளை முன்னிட்டு இயற்கை ஆா்வலா்கள் 100 மரக்கன்றுகளை நட்டனா். ராணிப்பேட்டை அடுத்த அம்மூா் காப்புக்காட்டில் அமைந்துள்ள காஞ்சனகிரி,செட்டிமலை பகுதியை... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் கொட்டப்பட்டுள்ள செயற்கை மணல்: தூசியால் அவதிக்குள்ளாகும் நோயாளிகள்

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் பள்ளங்களை மூடுவதற்காக பொதுப்பணித் துறையினரால் கொட்டப்பட்டுள்ள எம் சேண்ட் எனப்படும் செயற்கை மணலால் மருத்துவமனையின் அனைத்துப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள உள் நோயாளிகள்... மேலும் பார்க்க

முள்புதா்களில் பதுக்கிய 22 கிலோ கஞ்சா பறிமுதல்

அரக்கோணம், மாா்ச் 22: அரக்கோணம், பாணாவரம் பகுதிகளில் முள்புதா்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 கிலோ கஞ்சாவை அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். அரக்கோணம் மதுவிலக்கு அமல... மேலும் பார்க்க