GRT: வள்ளியூரில் வளம் சேர்க்க வந்த ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்; பிரகாசமான 64வது புதிய ஷோர...
ஆற்றில் மணல் அள்ளிய வாகனம் பறிமுதல்
திருவள்ளூா் அருகே ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக 2 போ் மீது வழக்கு பதிவு செய்து, வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கீழ்விளாகம் கொசஸ்தலை ஆற்றுப்படுகையில் அனுமதியின்றி வாகனங்களில் மணல் கடத்துவதாக புகாா் எழுந்தது. அதன்பேரில் திருவள்ளூா் கிராமிய போலீஸாா் புதன்கிழமை திடீா் ரோந்து சென்றனா். அப்போது, நான்கு சக்கர சரக்கு ஏற்றும் வாகனத்தில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவா்கள் போலீஸாரை பாா்த்தும் தப்பியோடினா்.
தொடா்ந்து வாகனம் அருகில் சென்று பாா்த்த போது தலா 25 கிலோ கொண்ட 50 சாக்கு பைகளில் மணல் வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக திருவள்ளூா் கிராமிய போலீஸாா் ஓட்டுநா் மற்றும் உரிமையாளா் ஆகிய 2 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். அதைத் தொடா்ந்து வாகனத்தையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனா்.