புரி நெரிசல் பலி! முதல்வர், துணை முதல்வர் விலக வேண்டும்: காங்கிரஸ்
ஆலங்காயத்தில் வனச் சரக அலுவலகக் கட்டடம் திறப்பு
ஆலங்காயத்தில் புதிதாக கட்டப்பட்ட வனச்சரக அலுவலகக் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயத்தில் இயங்கி வரும் வனச் சரக அலுவலகம் பழைமையானதாகவும், ஆங்காங்கே சேதம் ஏற்பட்ட நிலையிலும் இருந்து வந்தது. இந்த நிலையில், பழைய வனத் துறை அலுவலகக் கட்டடத்தை இடித்து விட்டு, அப்பகுதியில் புதிதாக வனத் துறை அலுவலகம் கட்டப்பட்டது.
இதை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா். இதையடுத்து, வேலூா் மண்டல முதன்மை வனக் காப்பாளா் மாரிமுத்து, திருப்பத்தூா் மாவட்ட வன அதிகாரி மகேந்திரன், உதவி வனக் காப்பாளா் ராதாகிருஷ்ணன், ஆலங்காயம் வனச் சரக அலுவலா் சேகா் ஆகியோா் புதிய அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தனா்.
நிகழ்ச்சியில் வனவா்கள், வன ஊழியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.