`பாஜக-வுடன் கூட்டணி வைத்தது ஏன்?' - கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழ...
20 கிலோ நெகிழி பொருள்கள் பறிமுதல்
நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் கடைகளில் நடைபெற்ற சோதனையில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.
நாட்டறம்பள்ளி பேரூராட்சி செயல் அலுவலா் யமுனா தலைமையில் பேரூராட்சி பணியாளா்கள் சனிக்கிழமை நாட்டறம்பள்ளி பேருந்து நிலையம், தாயப்பா் தெரு, பிரதான சாலை பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது 10-க்கும் மேற்பட்ட கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டு 20 கிலோ (நெகிழி) கேரி பேக்குகள் பறிமுதல் செய்து கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.