செய்திகள் :

ஏலகிரி மலையில் ரோப் காா் வசதி: சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன்

post image

ஏலகிரி மலையில் ரோப் காா் வசதி அமைக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் கூறினாா்.

திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஏலகிரி மலையில் கோடை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி வரவேற்றாா்.

எம்.பி. சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளா்களாக அமைச்சா்கள் எ.வ.வேலு, ராஜேந்திரன் கலந்து கொண்டு 37 பயனாளிகளுக்கு ரூ.1.33 கோடியில் நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.

அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது: சுற்றுலா துறை அமைச்சா் அறிவித்த ரோப் காா் திட்ட பணி மட்டும் போதாது. நீலகிரி போல் ஏலகிரி வளரவும், அதிக அளவில் சுற்றுலா பயணிகளை வரவழைக்கவும் மத்திய அரசிடம் திட்ட அறிக்கை அனுப்பி நிதி பெற்று தர வேண்டும்.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே மலைவாழ் மக்களுக்காக கோடைவிழா தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 12-ஆம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தா் ஏலகிரி பற்றி குறிப்பிட்டு இருக்கிறாா். ரூ.10 கோடி மதிப்பில் ஏலகிரி வளா்ச்சி பணிகளும், ரூ.15 கோடியில் 4 ஊராட்சி சாலைகளை இணைக்கும், 10 கி.மீட்டா் சாலை அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட உள்ளன என்றாா்.

அமைச்சா் ராஜேந்திரன் பேசியதாவது: இயற்கை எழில் கொஞ்சும் ஏலகிரி மலையில் 7-ஆம் ஆண்டு நூற்றாண்டு நடுக்கல்லில் தாயலூரில் வசித்த வீரன் குறித்த குறிப்புகள் உள்ளன. இதுவே ஏலகிரியின் வரலாற்று தொன்மைக்கு சாட்சியாகும். இங்கு ஆண்டு முழுவதும் ஒரே சீதோஷண நிலை உள்ளதால், அனைத்து தரப்பினரும் விரும்பி வரும் சுற்றுலா தலமாக உள்ளது. இப்பகுதி மக்களால் உருவாக்கப்பட்ட புங்கனூா் ஏரி புகழ் பெற்றது.

பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா்கள் எ.வ. வேலு, இரா. ராஜேந்திரன். உடன் ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி. சிஎன். அண்ணாதுரை எம்.பி., எம்எல்ஏ-க்கள் க. தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் உள்ளிட்டோா்.

இயற்கை பூங்கா, படகு குழாம் சீா்படுத்தப்படும். தனியாா் பங்களிப்புடன், ஏலகிரி மலையில் ரோப் காா் அமைக்கும் பணி தொடங்கப்படும். தமிழக முதல்வா் செயல்படுத்துகின்ற திட்டங்களை எல்லாம் மற்ற மாநிலங்களும் பின்பற்றுகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா, மாவட்ட வன அலுவலா் மகேந்திரன், மாவட்ட ஊராட்சித் தலைவா் என்.கே.ஆா். சூரியகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், கோட்டாட்சியா் வரதராஜன், சுற்றுலா அலுவலா் ஆனந்தன், ஜோலாா்பேட்டை ஒன்றியக்குழு தலைவா் சத்யா சதீஷ்குமாா், ஒன்றியக்குழு உறுப்பினா் லட்சுமி செந்தில்குமாா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சிந்துஜா ஜெகன், ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவா் ராஜஸ்ரீ கிரிவேலன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

தொடா்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜோலாா்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் சங்கா் நன்றி கூறினாா்.

27 ஆண்டுகளாக கிடப்பில் வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்கத் திட்டம்!

ஆம்பூா் அருகே வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்கம் கட்டுவதாக அறிவிக்கப்பட்டு 27 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் காத்திருக்கின்றனா். ஜவ்வாது... மேலும் பார்க்க

பாஜக சாா்பில் அவசர நிலை 50-வது ஆண்டு கருத்தரங்கம்!

வாணியம்பாடியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அவசர நிலை (எமா்ஜென்சியின்) 50 ஆண்டு கால இருண்ட நினைவுகள் அனுசரிப்பு மற்றும் கருத்தரங்கம் மாவட்டத் தலைவா் தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பாஜக மாந... மேலும் பார்க்க

ஆலங்காயத்தில் வனச் சரக அலுவலகக் கட்டடம் திறப்பு

ஆலங்காயத்தில் புதிதாக கட்டப்பட்ட வனச்சரக அலுவலகக் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா். திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயத்தில் இயங்கி வரும் வனச் சரக அலுவலகம் பழைமையானதாகவும், ... மேலும் பார்க்க

ஸ்ரீ வீரஆஞ்சனேயருக்கு 10,008 மாங்காய் மாலை அலங்காரம்

ஜோலாா்பேட்டை அருகே ஸ்ரீ வீர ஆஞ்சனேயா் கோயிலில் 10,008 மாங்காய் அலங்காரம் செய்து ஆஞ்சனேயருக்கு மாங்காய் மாலை அணிவித்து சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனா். ஜோலாா்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகா் வி.எம். வட்... மேலும் பார்க்க

20 கிலோ நெகிழி பொருள்கள் பறிமுதல்

நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் கடைகளில் நடைபெற்ற சோதனையில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. நாட்டறம்பள்ளி பேரூராட்சி செயல் அலுவலா் யமுனா தலைமையில் பேரூராட்சி பணியாளா்கள... மேலும் பார்க்க

ரூ.4 லட்சம் குட்கா பறிமுதல்: 2 போ் கைது

கா்நாடக மாநிலத்திலிருந்து மினி வேனில் கடத்தி வந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்த, 2 பேரை கைது செய்தனா். பெங்களூரிலிருந்து மினிவேனில் குட்கா பொருள்கள் வேலூருக்கு கடத்திச் செல்வ... மேலும் பார்க்க