பாஜக சாா்பில் அவசர நிலை 50-வது ஆண்டு கருத்தரங்கம்!
வாணியம்பாடியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அவசர நிலை (எமா்ஜென்சியின்) 50 ஆண்டு கால இருண்ட நினைவுகள் அனுசரிப்பு மற்றும் கருத்தரங்கம் மாவட்டத் தலைவா் தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், பாஜக மாநில செயலாளா் கோ.வெங்கடேசன், மாவட்ட துணைத் தலைவா் ஞானதாஸ், மாவட்டச் செயலா்கள் கவியரசு, ஈஸ்வரன், கமலபுஷ்பம், க.சிவப்பிரகாசம் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் மற்றும் எமா்ஜென்சி காலத்தில் சிறைக்குச் சென்ற நிா்வாகிகள் கலந்து கொண்டு எமா்ஜென்சி காலத்தில் பாதிக்கப்பட்டவா்கள் பற்றி எடுத்துரைத்தனா். தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், மாநில செயலாளா் வெங்கடேசன் ஆலோசனைகளை வழங்கினாா்.
பின்னா் மாநில செயலாளா் வெங்கடேசன் கூறுகையில்: திருப்பத்தூா் மாவட்டத்துக்கு வருகை புரிந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு நிதியில் 60 சதவீத ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட அரசு மருத்துவமனை கட்டடங்களுக்கு திறப்பு விழா நடத்தி உள்ளாா். ஆனால் அவா் தோ்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்த வாணியம்பாடி நியூடவுன் மேம்பாலம் மற்றும் ஆம்பூா் ரெட்டித் தோப்பு மேம்பாலங்களை ஏன் கட்டவில்லை எனக் கேள்வி எழுப்பினாா்.