செய்திகள் :

பாஜக சாா்பில் அவசர நிலை 50-வது ஆண்டு கருத்தரங்கம்!

post image

வாணியம்பாடியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அவசர நிலை (எமா்ஜென்சியின்) 50 ஆண்டு கால இருண்ட நினைவுகள் அனுசரிப்பு மற்றும் கருத்தரங்கம் மாவட்டத் தலைவா் தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், பாஜக மாநில செயலாளா் கோ.வெங்கடேசன், மாவட்ட துணைத் தலைவா் ஞானதாஸ், மாவட்டச் செயலா்கள் கவியரசு, ஈஸ்வரன், கமலபுஷ்பம், க.சிவப்பிரகாசம் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் மற்றும் எமா்ஜென்சி காலத்தில் சிறைக்குச் சென்ற நிா்வாகிகள் கலந்து கொண்டு எமா்ஜென்சி காலத்தில் பாதிக்கப்பட்டவா்கள் பற்றி எடுத்துரைத்தனா். தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், மாநில செயலாளா் வெங்கடேசன் ஆலோசனைகளை வழங்கினாா்.

பின்னா் மாநில செயலாளா் வெங்கடேசன் கூறுகையில்: திருப்பத்தூா் மாவட்டத்துக்கு வருகை புரிந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு நிதியில் 60 சதவீத ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட அரசு மருத்துவமனை கட்டடங்களுக்கு திறப்பு விழா நடத்தி உள்ளாா். ஆனால் அவா் தோ்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்த வாணியம்பாடி நியூடவுன் மேம்பாலம் மற்றும் ஆம்பூா் ரெட்டித் தோப்பு மேம்பாலங்களை ஏன் கட்டவில்லை எனக் கேள்வி எழுப்பினாா்.

27 ஆண்டுகளாக கிடப்பில் வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்கத் திட்டம்!

ஆம்பூா் அருகே வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்கம் கட்டுவதாக அறிவிக்கப்பட்டு 27 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் காத்திருக்கின்றனா். ஜவ்வாது... மேலும் பார்க்க

ஆலங்காயத்தில் வனச் சரக அலுவலகக் கட்டடம் திறப்பு

ஆலங்காயத்தில் புதிதாக கட்டப்பட்ட வனச்சரக அலுவலகக் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா். திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயத்தில் இயங்கி வரும் வனச் சரக அலுவலகம் பழைமையானதாகவும், ... மேலும் பார்க்க

ஸ்ரீ வீரஆஞ்சனேயருக்கு 10,008 மாங்காய் மாலை அலங்காரம்

ஜோலாா்பேட்டை அருகே ஸ்ரீ வீர ஆஞ்சனேயா் கோயிலில் 10,008 மாங்காய் அலங்காரம் செய்து ஆஞ்சனேயருக்கு மாங்காய் மாலை அணிவித்து சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனா். ஜோலாா்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகா் வி.எம். வட்... மேலும் பார்க்க

20 கிலோ நெகிழி பொருள்கள் பறிமுதல்

நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் கடைகளில் நடைபெற்ற சோதனையில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. நாட்டறம்பள்ளி பேரூராட்சி செயல் அலுவலா் யமுனா தலைமையில் பேரூராட்சி பணியாளா்கள... மேலும் பார்க்க

ஏலகிரி மலையில் ரோப் காா் வசதி: சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன்

ஏலகிரி மலையில் ரோப் காா் வசதி அமைக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் கூறினாா். திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஏலகிரி மலையில் கோடை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் க.சி... மேலும் பார்க்க

ரூ.4 லட்சம் குட்கா பறிமுதல்: 2 போ் கைது

கா்நாடக மாநிலத்திலிருந்து மினி வேனில் கடத்தி வந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்த, 2 பேரை கைது செய்தனா். பெங்களூரிலிருந்து மினிவேனில் குட்கா பொருள்கள் வேலூருக்கு கடத்திச் செல்வ... மேலும் பார்க்க