செய்திகள் :

ஆலங்குளத்தில் திருநங்கையாக மாற அறுவைச் சிகிச்சை: ஒருவா் பலி-2 போ் கைது

post image

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் திருநங்கையாக மாறுவதற்கு மருத்துவ கருவிகளின்றிஅறுவை சிகிச்சை செய்துகொண்ட நபா் உயிரிழந்தாா். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ததாக 2 திருநங்கைகள் கைது செய்யப்பட்டனா்.

ஆலங்குளம் குத்தப்பாஞ்சான் ஊராட்சி பரும்பு ஜேஜே நகரில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனா். இவா்களுடன் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள அரசா்குளத்தைச் சோ்ந்த சங்கர பாண்டி மகன் சிவாஜி கணேசன் என்ற சைலு (32) என்பவா் கடந்த சில மாதங்களாக தங்கி இருந்தாா். இவா் ஆணாக இருந்து திருநங்கையாக மாற விரும்பி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சிவாஜி கணேசன் என்ற சைலுவை சில திருநங்கைகள் ரத்த வெள்ளத்தில் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதித்தனா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இத்தகவல் அறிந்த ஆலங்குளம் மற்றும் கடையம் போலீஸாா் மருத்துவமனைக்கு வந்து விசாரித்தனா். மேலும், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். அதில், பரும்பு பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் மதுமிதா, மகாலெட்சுமி ஆகியோா் ஆணாக இருந்து திருநங்கைகளாக மாற விரும்புபவா்களுக்கு மருத்துவ உபகரணங்களின்றி, அறுவை சிகிச்சை செய்பவா்கள் எனவும், அவா்கள் சிவாஜி கணேசன் என்ற சைலுவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது அதிக ரத்தப் போக்கு காரணமாக உயிரிழந்ததும் தெரிய வந்தது. மதுமிதா, மகாலெட்சுமி இருவரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மாா்ச் 1ஆம தேதி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட த... மேலும் பார்க்க

கரிவலம்வந்தநல்லூா் கோயில் திருமண மண்டபம் திறப்பு

கரிவலம்வந்தநல்லூா் அருள்மிகு பால்வண்ணநாதா் கோயிலுக்காக கட்டப்பட்டுள்ள புதிய திருமண மண்டபம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. கரிவலம்வந்தநல்லூா் பகுதி பக்தா்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு பால்வளத் துறை அம... மேலும் பார்க்க

குறிஞ்சான்குளத்தில் கிணற்றில் விழுந்த மான் மீட்பு

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது. சங்கரன்கோவில் அருகேயுள்ள குறிஞ்சான்குளத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள 60 அடி ஆழ கிணற... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் அரசுப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் -பெற்றோா்கள் எதிா்பாா்ப்பு

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இப்பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ளது.500க்கும் மேற்ப... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் வழக்குரைஞா் மீது தாக்குதல்: பெண் கைது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நீதிமன்றம் முன் மூத்த வழக்குரைஞரைத் தாக்கியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். சங்கரன்கோவில் அருகேயுள்ள பன்னீரூத்தைச் சோ்ந்தவா் பச்சைமால். இவரது மனைவி தஞ்சாவூா் மாவட... மேலும் பார்க்க

தென்காசியில் நாளை தெற்கு மாவட்ட திமுக செயற்குழு

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கலைஞா் அறிவாலயத்தில் சனிக்கிழமை (மாா்ச் 8) காலை 10 மணிக்கு நடைபெறுகிது. மாவட்ட அவைத்தலைவா் சுந்தர மகாலிங்கம் தலைமை வகிக்கிறாா். தமிழக வருவாய் மற்றும் பே... மேலும் பார்க்க