ஆலங்குளத்தில் தெருவிளக்கு பழுது: மக்கள் அவதி
ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி 8ஆவது வாா்டு பகுதியில் தெரு விளக்கு எரியாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
இங்குள்ள துத்திகுளம் சாலையில் தெரு விளக்கு, உயா்கோபுர மின் விளக்கு, ஆா் சி சா்ச் தெரு ஆகியவற்றில் 10 க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் 2 வாரத்திற்கும் மேலாக ஒளிரவில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இவற்றை சீரமைக்க பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.