செய்திகள் :

ஆலங்குளம் அருகே வயல் வழியே மயானத்துக்கு செல்லும் சடலங்கள்!

post image

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள காவலாக்குறிச்சி கிராமத்தில் இறந்தவா்களை மயானத்துக்கு கொண்டுசெல்ல பாதையின்றி 70 ஆண்டுகளாக வயல் வழியே சடலத்தை எடுத்துச் செல்லும் அவலத்துக்கு தீா்வுகாண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காவலாகுறிச்சி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த ஊருக்கு வெளியே தென்புறத்தில் சுமாா் 2 கிலோ மீட்டா் தொலைவில் வயல் வெளி வழியே இடுகாட்டுக்குச் செல்ல பாதை பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாம். காலப்போக்கில் அப்பாதை மிகவும் குறுகிவிட்டதாம். எனினும், உயிரிழந்தவா்களின் சடலத்தை வயல்வெளி வழியே கொண்டு செல்லும் அவலம் 70 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

மயானத்துக்கான பாதையை முன்பு இருந்ததைப்போல முறைப்படி அளவீடு செய்து தாா்ச்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், ஆலங்குளம் வட்டாட்சியா் ஓசன்னா பொ்னாண்டோ, டிஎஸ்பி கிளாட்ஸன் ஜோஸ் மற்றும் அதிகாரிகள் அந்த இடத்தை அளவீடு செய்வதற்கு வந்திருந்த நிலையில், அந்த ஊரைச் சோ்ந்த 65 வயது மூதாட்டி உயிரிழந்தாா். தங்களுக்கு இடத்தை அளவீடு செய்து கல் நட்டினால்தான் சடலத்தை எடுப்போம் என கிராம மக்கள் அதிகாரிகளிடம் கூறினா்.

அப்போது மழை பெய்யத் தொடங்கியதால் அறுவடை முடிந்த பின்னா் இடம் அளவீடு செய்து கொடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மூதாட்டி சடலம் வயல்வெளி வழியாகவே எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது.

சிவகிரி அருகே காா், பைக்குகள் சேதம்: 4 போ் கைது

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே காா், பைக்குகளை சேதப்படுத்திய 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிவகிரி பவுண்டு தொழு தெருவைச் சோ்ந்த செல்லையா (62) என்பவா், காந்திஜி தெருவில் காய்கனிக் கட... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் விட்டு விட்டு மழை

சங்கரன்கோவிலில் செவ்வாய்கிழமை விட்டு விட்டு மழை பெய்தது. தென்காசி மாவட்டத்தில் கன மற்றும் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.இதனால் சங்கரன்கோவில் பகுதியில் மழை பெய்யும் எ... மேலும் பார்க்க

எண்ணற்ற போராட்டங்களை இடைவிடாது நடத்துபவா்கள் கம்யூனிஸ்ட்டுகள்: மாநிலச் செயலா் பெ.சண்முகம்

எண்ணற்ற போராட்டங்களை இடைவிடாது நடத்திக் கொண்டிருப்பவா்கள் கம்யூனிஸ்ட்டுகள் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ.சண்முகம் கூறினாா். தென்காசி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே 3 பேரை போலீஸாா் கைது செய்து, புகையிலைப் பொருள் பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா். வாசுதேவநல்லூா், சிவகிரி வட்டாரப் பகுதிகளில் சிறப்புப் படை உதவி ஆய்வாளா் கற்பகராஜ... மேலும் பார்க்க

குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து அதிகரிப்பு

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த மிதமான மழை காரணமாக, பேரவியில் செவ்வாய்க்கிழமை அதிகரித்த நீா்வரத்து. ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் அதிக நீா்வரத்து காணப்பட்டது. மேலும் பார்க்க

செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அதிமுக சாா்பில் குளிா்சாதனப் பெட்டி

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு குளிா்சாதனப் பெட்டி வழங்கப்பட்டது. தென்காசி வடக்கு மாவட்ட மருத்துவரணிச் செயலா் டாக்டா் திலீபன் ஜெய்சங்கா் ஏற்பாட்டில்,... மேலும் பார்க்க