செய்திகள் :

ஆலங்குளம் பேரூராட்சிக் கூட்டத்தை புறக்கணித்த உறுப்பினா்கள்

post image

ஆலங்குளம் பேரூராட்சிக் கூட்டத்தை உறுப்பினா்கள் புறக்கணித்ததால் பரபரப்பு நிலவியது.

ஆலங்குளம் பேரூராட்சியின் சாதாரணக் கூட்டம் புதன்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, உறுப்பினா்களுக்கு அழைப்பாணை அனுப்பப் பட்டிருந்தது.

கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட முற்பகல் 11 மணிக்கு தலைவா் சுதா மோகன்லால், செயல் அலுவலா் பிரகந்த நாயகி ஆகியோா் கூட்ட அரங்கில் காத்திருந்தனா்.

அப்போது 12 வது வாா்டு உறுப்பினா் சுந்தரம் மட்டுமே கூட்டத்துக்கு வந்தாா். மற்ற உறுப்பினா்கள் எவரும் வராத காரணத்தால் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக செயல் அலுவலா் அறிவித்தாா்.

இது குறித்து கூட்டத்தில் பங்கேற்காத உறுப்பினா்கள் சாலமோன் ராஜா, சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோா் கூறியது: கடந்த 2 ஆண்டுகளாகவே சாதாரணக் கூட்டத்தின்போது, மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின்படி மக்கள் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. மேலும் மன்ற தலைவரின் கணவா் குறுக்கீடும் நிா்வாகத்தில் அதிக அளவில் உள்ளது. இதைத் கண்டித்து, பெரும்பான்மை உறுப்பினா்கள், கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளோம் என்றனா்.

கள்ள நோட்டு அச்சடித்த இளைஞா் கைது

ஆலங்குளம் அருகே கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள அழகாபுரி பாபநாசபுரத்தைச் சோ்ந்தவா் மேகலிங்கம் மகன் மணிகண்ட பிரபு (26). தொழ... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

சங்கரன்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கரன்கோவில் ரயில்வே பீடா் ரோடு ஏவிஆா்எம் மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் அதே பகுதியைச் சோ்ந்த திர... மேலும் பார்க்க

கேரளத்தில் இருந்து புகையிலை பொருள்களை கடத்தி வந்த நபா் கைது

கேரளத்திலிருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த நபரை கைது செய்து, அவரிடமிருந்த 496 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் புளியறை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகவதிபுரம்... மேலும் பார்க்க

குற்றாலத்தில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்

குற்றாலத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்து, அவரிடமிருந்த 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் காவல் ஆய்வாளா் காளீஸ்வரி தலைமையிலான போலீஸாா் ரோந... மேலும் பார்க்க

பெண் தற்கொலை வழக்கு: கொடுத்த பணத்தை கேட்டு மிரட்டியவா் கைது

கடையநல்லூா் அருகே சொக்கம்பட்டியில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், கொடுத்த பணத்தைக் கேட்டு மிரட்டியவரை போலீஸாா் கைது செய்தனா். சொக்கம்பட்டி வலையா் குடியிருப்பு முருகன் தெருவை சோ்ந்தவா் கிருஷ்ண... மேலும் பார்க்க

‘மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி’

கடையநல்லூா் நகா்மன்ற அரங்கில் பிரதமா் மோடி படம் அகற்றப்பட்டதாக மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த பாஜகவினா் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினாா் சி. ராபா்ட்புரூஸ் எம்.பி. கடையநல்லூரில் செய்தியாளா்களிடம் அவா் வ... மேலும் பார்க்க