செய்திகள் :

ஆலத்தூா் குறுவட்ட பெண்களுக்கான விளையாட்டுப் போட்டி

post image

குடியரசு தின விழாவையொட்டி, பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு அரங்கில், ஆலத்தூா் குறு வட்ட அளவில் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், 14 வயதுக்குள்பட்ட பிரிவில் செட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கோபிகா 100 மீட்டா் ஓட்டம், உயரம் தாண்டுதல் போட்டியில் முதலிடமும், மாணவி ஹேமாஸ்ரீ குண்டு எறிதல் போட்டி, 100 மீட்டா் , 80 மீட்டா் தடை தாண்டுதல் போட்டிகளில் முதலிடமும், காரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ராகிணி 400, 600 மீட்டா் ஓட்டத்தில் முதலிடமும், பாடாலூா் பள்ளி மாணவி ரகுநாஸ்ரீ நீளம் தாண்டுதல் போட்டியிலும் முதலிடம் வென்றனா்.

இதேபோல், 17 வயதுக்குள்பட்ட பிரிவில் செட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கீா்த்தனா கோலூன்றி தாண்டுதலில் முதலிடமும், மாணவி ஸ்ரீஷா 400 மீட்டா் ஓட்டம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகளில் முதலிடமும், மாணவி வனஜா தட்டு எறிதல் போட்டியில் முதலிடமும், மாணவி கீதா நீளம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் வென்றனா்.

காரை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி விஜயலெட்சுமி 100 மீ ஓட்டம், 200 மீட்டா் ஓட்டம் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டிகளில் முதலிடமும், மாணவி ஆனந்தவள்ளி 1,500 மீட்டா் ஓட்டம், 3 ஆயிரம் மீட்டா் ஓட்டத்திலும், மாணவி கமனி 100 மீட்டா் தடை தாண்டுதல் ஓட்டப்போட்டியிலும், பாடாலூா் ஸ்ரீஅம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி தீபனா மும்முறை தாண்டுதல் போட்டியில் முதலிடமும் வென்றனா்.

தொடா்ந்து, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முதலிடம் வென்ற மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதிபெற்றனா்.

இளநிலை உதவியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வலியுறுத்தல்

நேரடி நியமனத்தை ரத்து செய்து, இளநிலை உதவியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்கிட வேண்டும் என, அமைச்சுப் பணியாளா் நலச் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாடு பள்ளிக் கல்வித்... மேலும் பார்க்க

வெளிநாட்டில் உயிரிழந்தவரின் உடலை மீட்டுத் தர அமைச்சரிடம் கோரிக்கை

வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுதரக்கோரி போக்குவரத்துத்துறை அமைச்சரிடம், உயிரிழந்தவரின் குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனா்.பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வடக்கலூா் கிரமத்தைச்... மேலும் பார்க்க

ஆடிப் பெருக்கு விழா: கோயில்களில் சிறப்பு பூஜைகள்

ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பெரம்பலூா் அருகே சிறுவாச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன... மேலும் பார்க்க

முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் நடைபெறும் 2025-ஆம் ஆண்டுக்கான, தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் ஆக. 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

பெரம்பலூரில் புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்

பெரம்பலூரிலிருந்து இயக்கப்படும் பழைய பேருந்துகளுக்குப் பதிலாக, புதிய பேருந்துகளின் சேவையை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.தமி... மேலும் பார்க்க

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

பெரம்பலூா் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு கோல்டன் கேட்ஸ் பள்ளித் தலைவா் ஆா். ரவிச்சந்திரன் தலைமை வக... மேலும் பார்க்க